திருப்பூர், அக். 27 - ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக பல்லடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ கம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாண வர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் ஆகியவற்றின் தமிழ்நாடு மாநில குழுக்கள் அறைகூவல் விட்டி ருந்தன. அதன் அடிப்படையில் இரு சங் கங்களின் திருப்பூர் மாவட்ட குழுக் கள் சார்பில் பல்லடம் தபால் நிலை யம் முன்பு வியாழக்கிழமை போராட் டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வாலி பர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் அருள் தலைமை ஏற்றார். மாணவர் சங்கத்தின் மாவட்ட தலை வர் பிரவீன் குமார், வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் செ. மணிகண்டன் ஆகியோர் உரையாற் றினர். இதில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் சௌந்தர்யா, மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட மாணவர், வாலிபர் சங்கங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இந்தி திணிப்பிற்கு எதி ராக முழக்கங்களை எழுப்பினர். இறு தியாக வாலிபர் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர் முருகேஷ் நன்றி கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.