மொடக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
ஈரோடு, மே 11- மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் திறக் கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், கணினி அறிவியல், வணிக வியல், வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்), வணிக நிர்வாகவியல் (கணினி பயன்பாட்டியல்) ஆகிய பாடப்பிரிவு களுக்கான முதலாமாண்டு சேர்க்கை நடைபெறுகிறது. இணையதளம் மூலம் மாணவ, மாணவியர் விண்ணப் பிப்பதற்கான உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இச் சேவை மையத்தில் பாஸ்போட் சைஸ் போட்டோ, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, இமெயில் முகவரி, கைபேசி எண் ஆகியவற்றுடன் கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இம்மையம் வரும் மே19ஆம் தேதி வரை செயல்படும். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவு கட்டணமாக ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். தரவரிசை பட்டியல் மே 23 ஆம் தேதியன்று கல்லூரியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். தரவரிசை ஒதுக் கீட்டில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான முதற் கட்ட கலந்தாய்வு மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 2 வரை நடை பெறும். மேலும் விபரங்களுக்கு 9363462073 மற்றும் 0424- 2333799 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற லாம்.
உயர் மின்னழுத்த கம்பி அமைப்பு வீடு கட்ட முடியாமல் பரிதவிப்பு
அவிநாசி, மே 11- சேவூர் அருகே வீட்டுமனை பிரிவுகளின் மீது உயர் மின்னழுத்த கம்பி அமைக்கப்பட்ட தால், வீடு கட்ட முடியாமல் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத் துக்கு உட்பட்ட பாப்பாங்குளம் ஊராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஏவிஏஸ் மகாலட்சுமி நகர் வீட்டுமனை பிரிவு அமைக்கப்பட்டது. இதில் வரன்முறைபடுத் தப்பட்ட 150க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி வரு கிறது. இந்நிலையில், தண்டுக்காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயி வசந்தாமணியம்மாள் உட்பட சிலர் வீட்டு மனை விலைக்கு வாங்கி உள்ளனர். இந்த மனை உள்ள பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பி அமைப்பட்டது. இதனால் வசந்தாமணியம்மாள் உள்ளிட்டோர் வீடு கட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளா கினர். இது குறித்து வசந்தாமணியம்மாள் கூறு கையில், இந்த உயர் மின் அழுத்த கம்பி அமைக்கப்பட்டுள்ளதால், வீடு கட்ட முடி யாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து, சேவூர் தெற்கு மின்வாரிய உதவி செயற் பொறியாளரிடம் முறையிட்டோம். அவர், முறையாக பதில் அளிக்காமல் காலமாக தாழ்த்தி வருகின்றார். உயர் மின்னழுத்த கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக தலையீட்டு எங்களின் அவதியை போக்க வேண்டும், என்றார்.
காவலர் நிழற்குடை மீது பேருந்து மோதி விபத்து
போக்குவரத்து பாதிப்பு
சேலம், மே 11- சேலம் பழைய பேருந்து நிலையத்தி லிருந்து வந்த நகர பேருந்து, முள்வாடி கேட் அருகே உள்ள போக்குவரத்து காவலரின் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளா னதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம், முள்வாடி கேட் பகுதியில் புதி தாக மேம்பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனால் ஒரு வழிப் பாதை மட்டுமே செயல்பட்டு வருவதால், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக ரயில் வரும் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, ஜங்சனுக்கு செல்லும் அரசு நகர பேருந்து வழித்தட எண்:7 முள்ளுவாடி கேட் அருகே வளைவில் திரும்பும் போது, அந்த இடத்தில் உள்ள போக்குவரத்து காவலரின் நிழற் குடையின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் நிழற்குடை சாலை யில் சாய்ந்தது. இதனைத்தொடர்ந்து போக்கு வரத்து பாதுகாப்பில் இருந்த காவல் துறை யினர் உடனடியாக வந்து சாய்ந்த நிழற் குடையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் வந்த வாக னங்கள் ஆங்காங்கே நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே ஒரு வழி பாதையாக இருக்கக் கூடிய இந்த தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூதாட்டம்: 27 பேர் கைது
கோவை, மே 11- மேட்டுப்பாளையத்தில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடிய 27 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ. 31 ஆயிரத்து 700 பணத்தை பறிமுதல் செய்தனர். மேட்டுப்பாளையம், பத்ர காளியம்மன் சாலையில் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சீட்டு விளையாடு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், சட்ட விரோத மாக சீட்டு விளையாடிய 27 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, அவர்களிட மிருந்து ரூ.31 ஆயிரத்து 700 பணத்தை பறிமுதல் செய் தனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:29.38/60அடி
நீர்வரத்து:5கன அடி
வெளியேற்றம்:42கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்:61.52/90அடி.
நீர்வரத்து:205கனஅடி
வெளியேற்றம்:13கன அடி
அடிப்படை வசதிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தருமபுரி, மே 11- மக்கள் நலத்திட்டங்களுக்கு போதி நிதி ஒதுக்கீடு இல்லை என குற்றஞ்சாட்டி, திமுக உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. தருமபுரி மாவட்ட ஊராட்சி முகமை அலுவலக கூட்டரங் கில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கி தராததால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை கூட செய்து தர, ஏன் எந்த ஒரு நிதியையும் ஒதுக்கி தரவில்லை, என மாவட்ட கவுன் சிலர்கள் குரல் எழுப்பினர். மேலும், மக்கள் கேட்கும் கேள்வி களுக்கு தங்களால் பதில் கூறமுடியவில்லை. பல கூட்டங்க ளில், எங்கள் பகுதி குறித்த கோரிக்கைகளை தெரி வித்தோம். தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வியழுப்பினர். முன்னதாக, கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட16 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிரலிருந்து வெளி நடப்பு செய்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 8 மாத காலமாக மாவட்ட கவுன் சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதி ரூ 5 கோடி ஒதுக்க வில்லை நாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீதும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, மாவட்ட நிர்வா கம் தலையிட்டு எங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றனர்.
அரசு தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் சேர்க்கை
ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டு முழுநேர பட்ட யப்படிப்பில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர் பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழு நேர பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் (BC, MBC / OBC / DNC / OC)க்கு ரூ.150 பதிவுக் கட்டணமாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண் டும். பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவருக்கு விண்ணப்ப பதிவு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகராறு: 2 பேர் கைது
கோவை, மே 11- கோவை, உக்கடம் குடிசை மாற்று வாரிய பகு தியைச் சேர்ந்தவர் அப்சல் (19). இவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப் படுகிறது. இவர், சுங்கம் நெஞ் சாலையில் கஞ்சா விற் பனை செய்து கொண்டிருந்த போது, உக்கடம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (27), பாலமுருகன் (24) ஆகியோர் அவரிடம் வந்து வாக்குவா தம் செய்தனர். இரு தரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கார்த்தி கேயன், பாலமுருகன் ஆகி யோர் அப்சலை தாக்கி கத்தி யால் குத்தினர். இதில் காயம டைந்த அப்சல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட் டார். இதுதொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக் குப்பதிவு செய்து கார்த்தி கேயன், பாலமுருகன் ஆகி யோரை கைது செய்தனர். கைதான இரண்டு பேரும் கஞ்சா விற்பனை, திருட்டு உள் ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
பெரியார் பல்கலை., பருவத்தேர்வுகள் தள்ளிவைப்பு
மாணவர் சங்கம் கண்டனம்
சேலம் மே 11- சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் தலை யீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங் கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழுவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்களது துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல் லூரிகளுக்கான பருவத்தேர்வுகளை மே மாதம் முடித்து, ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதனால் மாணவர்கள் உடனடியாக உயர்கல்விக் கான சேர்க்கை பெறுவர். இதற்கி டையே சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் இந்த கல்வியாண்டின் இறுதித் தேர்வுகள் மே மாதம் முடிவடையும் என கடந்த ஜன.13 ஆம் தேதியன்ற சுற்ற றிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், தற் போது இறுதித்தேர்வுகள் மே 25 ஆம் தேதியன்று துவங்கி, ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் என சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத னால் இணைவுபெற்ற கல்லூரிகளும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். ஜூன் இரண்டாம் வாரம் தேர்வு முடிவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிய ஒரு மாதமாகும். இத னால் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் மத்தியில் வெளிவரும். இதனால், பெரி யார் பல்கலைக்கழகத்தில் படித்த மாண வர்களின் உயர்கல்வி (பிஜி) சேர்க்கை பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் விடைத் தாள் அடிக்கும் டெண்டர்கள் ஜனவரி மாதமே முடிவாகி, அச்சடிக்க ஆர்டர் தரப்படும். இந்த ஆண்டு பேராசிரியர் பெரியசாமி தலைமையில் ராஜி, பிர காஷ் மாறன் உள்ளிட்டோர் அடங்கிய டெண்டர் செலக்சன் கமிட்டி அமைக்கப் பட்டது. டெண்டர் எடுக்கும் கம்பெ னியை முடிவு செய்வதில் கமிட்டித் தலைவரும், நிர்வாகமுமே இந்த தாம தத்திற்கு காரணமாகும். விடைத்தாள் அடிக்கும் டெண்டரில் முறைகேடு நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உடனடி யாக விசாரிக்க வேண்டும். அத்துடன் தேர்வுகள் தாமதமானதிற்கு காரணம் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். பெரும்பாலான மத்திய, மாநில பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களின் முதுகலை சேர்க்கை ஜூலையில் முடிவடைந்து விடும். இதனால், பெரி யார் பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களின் உயர் கல்வி கடுமை யாக பாதிக்கப்படும். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முதியோர் இல்லங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கோவை, மே 11- முதியோர் இல்லங்கள் மற்றும் ஓய்வு கால முதியோர் இல்லங்கள், முதியோர் வளா கங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி யார் நிறுவனங்களால் சேவை நோக்கில் அல் லது வணிக நோக்கில் முதியோர் இல்லங்கள், ஓய்வுகால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள், உதவிவாழும் இல்லங்கள், நோய் தடுப்பு பராமரிப்பு இல்லங்கள், நல் வாழ்வு பராமரிப்பு இல்லங்கள், இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இவற்றை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் - 2007ன் படி மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். எனவே, மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், ஓய்வுகால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள் ஆகிய அனைத்தும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலு வலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரை விற்றவர் கைது
கோவை, மே 11- கோவை, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஹரன் (19). இவர் தடாகம் சாலையில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாய்பாபா காலனி போலீசார், தடாகம் சாலை யில் சோதனை நடத்திய போது, ஹரிஹரன் விற்ப னைக்காக வைத்திருந்த 80 போதை மாத்திரைகள் சிக்கி யது. இதையடுத்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.