சேலம், ஜன.19- சேலம் மாநகர புதிய பேருந்து நிலையத்தில் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் செயல்படும் கட்டண கழிப் பிடம் முறையாக சுத்தம் செய்யப் படுவதில்லை, ஆனால், அதிக பணம் பொதுமக்களிடம் வசூல் செய்யப்படுகிறது. தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்காக வைக்கப்பட்ட இலவச குடிநீரை அங்குள்ள உணவத்தினர் பிடித்து செல்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டப்பட்ட இலவச கழிவறையை திறக்காமல் பூட்டு போட்டுள்ளனர். பயணிகள் நடைபாதையில் அரசியல் கட்சி யினர் ஆக்கிரமித்து கடை அமைத் துள்ளனர். இத்தனை சீர்கேடு களையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் சேலம் மாநகராட்சி நிர்வா கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாநகர செயலாளர் என். பிரவீன்குமார் தலைமை தாங்கி னார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.குழந்தைவேல், எம். சேதுமாதவன், கே.வசந்தி மற்றும் கட்சியின் மாநகரக்குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், ஊழியர்கள் திரளானோர் பங்கேற் றனர்.