உடுமலை, மே 26 - மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் பேரூராட்சி, பெருமாள் புதூரில் பட்டா வழங்கி யும் ஏழாண்டுகளாக நிலம் அளந்து தராத நிலையில் விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் காத்திருப்புப் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து பட்டா வழங்கிய நிலத்தில் ஆக் கிரமிப்புகளை அகற்றி பயனாளிகளுக்கு இடம் அளந்து கொடுக்க வருவாய்த்துறை யினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பேரூராட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வீடில்லா ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப் பட்டது. ஆனால் இடம் அளவீடு செய்து வழங் கப்படவில்லை. விவசாய தொழிலாளர் சங் கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும், அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர். இந்த நிலையில் வெள்ளியன்று வட்டாட்சி யர் அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், சர்வேயர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வெள்ளியன்று, பட்டா வழங்கப்பட்ட நிலத்திலிருந்து ஆக்கிர மிப்புகளை அகற்றினர். அங்கிருந்த வீட்டு மனை இடங்களை கையகப்படுத்தினர். இங்கு வீட்டுமனை இடங்களை அளவீடு செய்து பட்டா பெற்றிருக்கும், உரியவர்களி டம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் உறுதி கூறினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் தொடர் போராட்டத்தினால் வீட்டு மனை வழங்கும் நடவடிக்கை விரைவு பெற் றுள்ளது. வீட்டுமனை பெறும் எளிய மக்க ளுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி செய்ய வேண் டும் என சங்கத்தின் சார்பில் கோரியுள்ளனர்.