கோவை, நவ.20- கோவையில் போலீசார் வாகனத்தில், மினி நூலகங்கள் சனியன்று திறக்கப்பட்டுள்ளது. கோவை ஆயுதப்படை காவல்துறையினரை அழைத்துச் செல்லும் வாகனங்களில் சிறிய நூலகத்தை காவல் ஆணை யாளர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை மாநகர காவல்துறை சார்பில், போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை ஆயுதப்படையில் பணி யாற்றும் காவலர்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக அழைத்துச் செல்லும் வாகனங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலை யங்கள், மக்கள் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக் கப்பட்டன. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத் தினருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தில் தமிழ் இலக்கியங்கள், உரை நடை, கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளன.