ஈரோடு, பிப்.16- தளவாய்பேட்டையில் வாரச்சந்தை சிறப் பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டு மென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து விதொச பவானி தாலுகா செயலாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஜம்பை பேரூ ராட்சிக்குட்பட்ட தளவாய்பேட்டையில் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. செவ்வா யன்று செயல்படும் இந்த சந்தை பெரும் பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் பலமுறை சந்தை கூடும், வியாபாரிகளும், மக்களும் சென்று பயன்பெற வேண்டும் என ஒலி பெருக்கி வாயிலாக தெரிவிக்கிறது. ஆனால் குறைந்த அளவிலான வியாபாரிகள் வரு கின்றனர். அதையும் வாங்க நுகர்வோர்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கிறது. முறையாக சந்தைக்கென அமைக்கப் பட்ட இடத்தை விட்டு நான்கு முனை சந்திப் பான பகுதியில் சாலையின் இருபுறங்களி லும் கடை அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இவர்கள் சந்தை வளாகத்திற்குள் செல்ல மறுக்கின்ற னர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் இவ்விச யத்தில் உடனடி கவனம் செலுத்தி, விபத்து கள் நேராத வண்ணமும், மக்கள் சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவதையும் முறைப் படுத்த வேண்டும். அத்துடன் விபத்துக்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும். நிறை வான முறையில் சந்தை செயல்பாட்டை உத் தரவாதம் செய்ய முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.