districts

img

அக்மெட் 2022 - வருடாந்திர அறிவியல் மாநாடு

கோவை, பிப்.15- கோவை வேளாண் பல்கலைக்கழகத் தில் அக்மெட் 2022 வருடாந்திர அறிவியல் மாநாடு புதனன்று துவங்கியது. மூன்று நாட் கள் நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற் றம், உணவு உற்பத்தி தக்க வைப்பது உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவா திக்கப்பட உள்ளது. வேளாண் வானிலை விஞ்ஞானிகள் சங் கத்தின் சார்பில், வேளாண் வானிலை உத்தி கள் எனும் தலைப்பில் இம்மாநாடு நடக்கி றது.  தற்போது மாறிவரும் காலநிலை சூழலில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் காரண மாக பசுமைக்குடில் வாயுக்களின் தாக்கம், கரியமில வாயு மற்றும் காற்றின் வெப்பநிலை அதிகரிப்பு, உமிழ்வின் தாக்கம் உற்பத்தி திறன், காலநிலை மாற்றம் பல்வேறு பயிர்க ளில் தாக்கம், எதிர்கால சூழ்நிலைகள், எதிர்ப் புத் திறன் கொண்ட பயிர்கள் உருவாக்குதல், உணவு உற்பத்தியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இம்மாநாடு விவா திக்க உள்ளது. இதில், வானிலை விஞ்ஞானி கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கள் பங்கேற்றுள்ளனர்.  உணவு உற்பத்தியை நிலை நிறுத்த இந் திய வானிலை ஆய்வுத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங் கள் ஆகியவற்றில் இருந்து சுமார் 250 தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த மாநாட் டில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.  மாநாட்டின் துவக்க நிகழ்விற்கு, வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் வெ.கீதா லட்சுமி தலைமை தாங்கினார். ‌மூத்த கால நிலை நிபுணர் பி.வி.ரமணா ராவ் நிகழ்ச்சிக்கு  முன்னிலை வகித்தார். மாநாட்டிற்காக 250  ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டுள்ளது. இதில், பருவநிலை மாறுபாடு, விவசாயம் குறித்த தீவிர நிகழ்வுகள், நுண்ணிய வானிலை தலை யீடு உள்ளிட்ட ஆறு முக்கிய கருப்பொருட் களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.‌ இம்மாநாட்டு பணிகளை கருத்தரங்கு தலைவர் கலாராணி, செயலாளர் இராமநா தன் மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஒருங்கிணைத்து வரு கின்றனர்.