திருப்பூர், ஜூன் 28- ஒன்றிய இணையமைச்சர் எல்.முரு கன் திடீர் பயணமாக திருப்பூர் மாவட்டத் திற்கு வருகை தந்து செவ்வாயன்று அவி நாசியில் பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், 60 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியாளர் கள் செய்யாததை மோடி அரசு ஒன்ப தாண்டு காலத்தில் செய்ததாகக் கூறி னார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பகுதி பெண்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, 9 ஆண்டுக்கு முன் சுமார் ரூ.400 அளவில் இருந்த விலையை மூன்று மடங்கு ரூ.1200க்கு மேல் உயர்த்தியதை சாதனை என்று சொல்கிறாரா என்று பேசிக் கொண்ட னர். பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்றியதா கவும் அமைச்சர் முருகன் கூறினார். உண்மையில் அன்றாட காய்கறிகள் தொடங்கி உணவுப் பொருட்கள் விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்து போய் நாங்கள் கண்ணீர் சிந்திக் கொண் டிருக்கிறோம். இதுதான் மோடி அரசு ஒளியேற்றிய லட்சணமா? என்றும் அவர் கள் எதிர்க்கேள்வி எழுப்பினர். காஷ்மீரில் இயல்பு நிலை, இயல்பு வாழ்க்கையை பிரதமர் மோடி நினை வாக்கித் தந்தாராம். மாநிலமாக இருந்த காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதே சங்களாக மாற்றியதுடன், அப்பகுதி மக் களின் அடிப்படை ஜனநாயக உரிமை யையும் முடக்கி, இயல்பான நிலையை கேள்விக்குறியாக்கியது பாஜக அரசு. விரைவில் அங்கே தேர்தல் நடத்துவ தாகக் கூறியிருந்தவர்கள் இப்போது வரை அங்கு தேர்தல் நடத்தாமல் தள் ளிப் போடுவதிலேயே அவர்களது தோல்வி பயமும், இயல்பு நிலை இல் லாமல் காஷ்மீர் திண்டாடி வருவதை யும் புரிந்து கொள்ள முடியும்.
வழக்கமாக, மோடி அரசின் திட்டங்க ளுக்கு தமிழ்நாட்டில் மாநில அரசு உரிமை கொண்டாடுவதாக பாஜகவி னர் கூறுவதுண்டு. ஆனால் ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டும் பங்க ளிப்பு செலுத்தி செய்யக்கூடிய திட்டங் களை ஒன்றிய அரசின் திட்டமாக, மோடி அரசு நிறைவேற்றிய திட்டமாக இக்கூட் டத்தில் தெரிவித்துக் கொண்டனர். கடந்த சுதந்திர தினத்தில் செங்கோட் டையில் பேசும்போது, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க மோடி உறுதியளித்தார். அதில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட் டதாக அமைச்சர் முருகன் கூறினார். ஆனால் எந்தெந்த துறையில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற விபரம் எதையும் அவர் விளக்கிக் கூறவில்லை. அத் தோடு அவர் வாக்குறுதி அளித்து 10 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறினால், அடுத்த சுதந்திர தினம் வருவதற்கு இன் னும் ஒன்றரை மாதம் மட்டுமே இருக் கும் நிலையில் மீதி 4 லட்சம் பேருக்கு எப்போது வேலை தருவார்கள்? ஆக, புள்ளி விபரங்களை அடுக்கிச் சொன் னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று அமைச்சர் பேசினார். சொல்வதற்கு உண்மையில் சாதனைகள் இல்லாத போது, மக்கள் படும் வேதனைகளை மறைப்பதற்காக, பெருமித உணர் வைத் தூண்டி விடும் வகையில் அமைச் சர் பேசிச் சென்றது அங்கிருந்த சாமா னிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை யும், அதிருப்தியையுமே ஏற்படுத்தி யது. (ந.நி.)