நாமக்கல், ஜன.19- துருக்கியில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நாமக்கல்லைச் சேர்ந்த இலக்கியாவை, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான எஸ். கிருஷ்ணமூர்த்தி, சித்ரா தம்பதிய ரின் மூத்த மகள் கே.இலக்கியா. எம்பிஏ பட்டதாரியான இவர் சிறுவயது முதல் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றவர். அண் மையில் துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் இலக்கியா தேர்வான நிலையில், அதில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, இராசிபுரம் வடக்கு ஒன்றிய செய லாளர் கோ.செல்வராசு, இராசிபுரம் நகர கிளை செயலாளர் சி.சண்மு கம், மாவட்ட குழு உறுப்பினர் பி.ராணி, பட்டணம் பேரூர் கிளை செயலாளர் கோ.பன்னீர்செல்வம் மற்றும் பெரிய சாமி ஆகியோர் இலக்கியாவின் இல் லத்திற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.