அன்னூர், மார்ச் 28- அன்னூர் அருகே அதி வேகமாக வந்த தனியார் பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது, புளிய மரத்தில் மோதி விபத்துக்குள் ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் வழியாக கோவை மாநக ருக்கு செல்வதற்காக ராஜம் என்ற தனியார் பேருந்து சத்திய மங்கலத்தில் இருந்து பயணிகளுடன் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து அன்னூர் அருகே உள்ள எல்லப் பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது அங்கு சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, பின்னர், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி அருகில் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித் தவர் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பேருந்தை விட்டு தப்பி ஓடிய நிலையில், விபத்து குறித்து பொதுமக்கள் அன்னூர் போலீசாருக்கும், 108 ஆம்பு லன்ஸ்க்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து காயம டைந்தவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.