தென்காசி,மார்ச் 13- தென்காசி மாவட்டம் சங்கரன்கோ வில் வடக்கு புதூரைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உட லை வாங்காமல் தொடர் போராட்ட த்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஊர் பொதுமக்கள் அவரது ஊரில் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலை யில் ஐந்தாவது நாளான புதன்கிழ மையன்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் வாகன ஓட்டுநர் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சங்கரன்கோவிலில் குவிந்தனர். தேரடித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் அசோக்ராஜ், திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியும் நகர்மன்ற உறுப்பினருமான வேல்ரா ஜன் மற்றும் சிபிஐ, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் சார்பில் சி.கே.குமார் வெள்ளத்துரை உள்பட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாகன ஓட்டுநர் முருகன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.