districts

அண்ணாமலையின் வாட்ச் பில்லை மக்கள் நம்ப மாட்டார்கள்

திருப்பூர், ஏப்.16 - வாட்ச் பில்லில் நேர்மையில்லாத அண்ணாமலையை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் என்பது ஒழிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் குடி யரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலா மின் முன்னாள் அறிவியல் ஆலோ சகர் பொன்ராஜ் கூறினார். திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆத்மா சமூக நல அறக்கட்டளை மற்றும் புஜிபி யூர் குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் பல்வேறு துறைகளில் பரிணமித்து வரும் 100 யூ டியூப் சேனல் தேர்வு செய்து அதன் நிர்வாகிகளுக்கு விருது  வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், டாக்டர் அப்துல்  கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோ சகர் பொன்ராஜ் கலந்துகொண்டு  சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் திறமைகளை ஊக்குவிக்கும்வண்ணம் தேர்வு செய் துள்ள 100 யூ டியூப் சேனல் நிர்வாகி களுக்கு கூல் கிங் ஸ்டார்  விருதுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  பாரதிய ஜனதா கட்சியின் மாநில  தலைவர் அண்ணாமலை, திமுக வினர்கள் ஒரு லட்சம் கோடி சொத்து  பட்டியலை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு, இது ஒன்றும்  புதியதாக சொன்னது போல இல் லையே, அண்ணாமலை சொன்னது எல்லாமே தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே, ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

புதியதாக ஒன்றும் இல்லை.  அவர்கள் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச்சுக்கு பில் கேட்டு  வருகின்றனர். அந்த பில்லை கூட சரி யாக காண்பிக்கவில்லை. இன்றைய  டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதி உள்ள பில்லை காண்பிக்கின்றனர். அதிலும் சீரியல் நம்பர் மாறி உள்ளது.  இரண்டு சீரியல் நம்பர் உள்ளது.  ஐபிஎஸ்  படித்தவர் யோசனை செய்து, தான்  செய்வதை சரியாக செய்திருந்திருக் கலாம். இந்த பிரச்சனையில் இருந்து தப்பி இருக்கலாம். வாட்ச் பில்லையும் காட்ட முடியாமல் மாட்டிக்கொண்டார். அவர் சொன்னதற்கு நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது.  ஊழல் என்பது ஒரு சமூக நோய். இதில் திமுக, காங்கிரஸ், பிஜேபி உள் ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் விதி விலக்கு அல்ல. ஊழல்  சமூக நோயாக மாறி இருப்பதால் ஒட்டு மொத்த மக்களின் மனநிலையே மாறி  உள்ளது. எதிர் காலத்தில் எந்த அளவுக்கு போய் சேரும் என்பதை மன வருத்தத்துடன்  எதிர்நோக்கி இருக்க வேண்டி உள்ளது. லஞ்ச ஊழலை ஒரு வியாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதானி  தொடர்பாக 20,000 கோடி ரூபாய் கேள்வியை ராகுல் காந்தி எழுப்பிய தால் மோடியிடம் பதில் இல்லை. ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எதிர் கால சமுதாயம் இது தான் நாடு, இதுதான் வழிமுறை என கெட்டுப் போய் விடக்கூடாது.  கெட்டுப் போனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிவுக்கு உள்ளாக்கப்படும். சமூக சீர்கேடு நடக்கும். ஆகவே ஊழல் என்கிற நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.