districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வீடு, வீடாக வாக்காளர் பட்டியலுடன்  ஆதார் எண் இணைக்கும் பணி

கோவை, அக்.15- கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  இணைக்கும் பணி ஞாயிறன்று நடைபெறும் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர்  அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி சமர்ப்பிக்கலாம்.  வாக்காளர்  அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை  இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல்  நடந்து வருகின்றன. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர்  அடையாள அட்டை எண்ணுடன் voter  helpline செயலி மூலமும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி.யில் பதிவு செய்யலாம். கோவை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று வாக்காளா் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கி யுள்ளது. இது  ஞாயிறன்று (16ஆம் தேதி) நடைபெறுகிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியத்  தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை  மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதார்  எண்ணை 10 லட்சத்து 93 ஆயிரத்து 980 போ் (36.23 சதவீதம்)  பேர் மட்டுமே இணைத்துள்ளனா். எனவே, இந்த பணியினை விரைவுபடுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று   விவரங்கள் சேகரிக்கும் பணி ஞாயிறன்று நடைபெறுகிறது. வாக்காளா்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை  அலுவலா்களிடம் தங்களது விவரங்களை அளித்து வாக் காளா் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து தகராறு - பெண்ணை தாக்கிய 50  பேர் மீது வழக்குபதிவு

சேலம்,அக்.15- சேலம் அருகில் சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய  50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு உள்ளனர்.  சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி  கிராமம், பெரிய காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்  (50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ப வருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவதன்று ராஜேந்திரன் குடும் பத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் அன்பழகன் வீட்டிற்கு சென்று  தகராறில் ஈட்டுப்பட்டு அன்பழகன் அவரது மனைவி வண்ணக் கொடி ஆகியோரை காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த வண்ண கொடி கொடுத்த புகாரின் பேரில் குமார், கந்தசாமி,  சக்திவேல், மனிவாசன், ராஜா,அழகேசன், சுப்ரமணி, லட்சுமி,  பாப்பாத்தி, ராஜேந்திரன், அலமேலு மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர் மீது தார மங்கலம் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி   பட்டாசு வெடிக்க வேண்டும் 

 கோவை காவல் ஆணையாளர்

கோவை, அக்.15- உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளியன்று குறிப் பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் மாநகர காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  இதுகுறித்து கோவை காவல் ஆணையாளர் ப. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள்  வெடிப்பது என்பது முழுமையாக தடை செய்யப்பட வில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளவாறு, காலை 6 மணி முதல் 7 மணி வரை யிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.  ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக், காரீயம்,  பேரியம் உப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள்  தடை செய்யப்பட்டுள்ளன. பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும். வெடிக்க வேண்டும். சரவெடிகள் விற்பது,  வெடிப்பதும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட் டுள்ளது.  பட்டாசுக்களை உரிமம் வழங்கப்பட்ட விற்பனை யாளர்கள் மட்டுமே விற்க வேண்டும். விற்பனையாளர்கள் பெட்ரோலியம், வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய மற்றும் ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை  செய்ய வேண்டும். அமைதிப்பகுதிகள் என வரையறுக் கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக மருத்துவமனைகள், நர்சிங்  ஹோம்ஸ், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில்  வளாகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க், பிற வகை எரிபொருள் நிரப்பும் இடங்கள், கல்வி நிறுவனங்கள்  அமைந்துள்ள பகுதிகளிலும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ஆடைகள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.  அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பட்டாசு களை வெடித்து அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சொத்துகளுக்கு தீங்கு மற்றும் சேதம் ஏற்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக வழக்குப்பதிவு செய் யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

பட்டாசுக் கடை: 132 பேர் விண்ணப்பம்

திருப்பூர், அக்.15 - ஆன்லைன் மூலம் கடந்த செப்.30 ஆம் தேதி வரை யில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள்  பெறப்பட்டன. அதன்படி,  திருப்பூா் மாவட்டத்தில் பல்ல டம்-31, உடுமலை, அவிநாசி யில் தலா-22, திருப்பூர்  தெற்கு-14, தாராபுரம்-13, ஊத்துக்குளி-12, காங்க யம்-11, மடத்துக்குளம்-7  என மொத்தம் 132 பேர் தற்காலிக பட்டாசுக் கடை  அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

உதகை அபாயகரமான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

உதகை,  அக். 15- சிறுமலர் நகர் குடியிருப்பு பகுதியில் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மனு அளித் தனர்.  சதுப்பு நிலங்களும், மலை முகடுகளையொட்டிய பகுதி களில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடை யாளமாக இருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்பூர மரங்கள் எரிபொருள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் நடப்பட்டு தற்போது பரவி விட்டது. வனத் துறையினர் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு  பகுதிகளிலும் கற்பூர மரங்களை நடவு செய்தனர். இதில் குடி யிருப்புகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்  மற்றும் சாலையோரங்களில் இந்த கற்பூர மரங்களை நடவு  செய்யப்படடது.  இதனால் நீலகிரியில் தென்மேற்கு மற்றும்  வடகிழக்கு பருவமழையின் போது இந்த மரங்கள் விழுந்து  விபத்து ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில் சிறுமலர் நகர் பகுதி மக்கள் பட்பயர் வனத் துறை அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, ஊட்டி நகராட்சி பட்பயர் 2-ஆவது வார்டிற்கு உட்பட்ட  சிறுமலர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வளர்ந் துள்ள ராட்சத கற்பூர மரங்களால் பொதுமக்கள் கடும் அச் சத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் இந்த மரங்கள் குடி யிருப்பு மேல் விழுவதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த  2  நாட்களுக்கு முன் ஒரு மரம் குடியிருப்பு மீது விழுந் துள்ளது. இதனால், குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. எனவே, சிறு மலர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களை  உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதி காரிகளிடமும் மனு அளித்ததனர்.

இந்தி திணிப்பை எதிர்த்து  திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 15 - ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் திமுக இளைஞரணி மற்றும்  மாணவரணியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழு வதும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை ரத்து செய்ய  கோரியும் மாநில அளவிலான இயக்கத்தின் ஒரு பகுதியாக  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு பாஜக அரசை கண் டித்து  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமை ஏற் றார். இதில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உள்பட திர ளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து கண்டன  முழக்கம் எழுப்பினர்.

திருப்பூரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருவர் சிறை

திருப்பூர், அக். 15 – திருப்பூர் மாநகரில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட தாக கைது செய்யப்பட்ட இருவர் மீது தேசிய பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக் கப்பட்டதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அங்கேரிபாளையம் ஏவிபி  லே அவுட் பகுதியில் லட்சுமணன் என்பவர் வீட்டின் முன்பு  கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசியதாக அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து காவல் துறை யினர் தேடி வந்தனர். திருப்பூர் மேற்கு அண்ணாநகரில் வசித்து வந்த, கேரள மாநிலம் பாலக்காடு கொளிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பெரோஸ்கான் (32), பாண்டியன் நகர்  கருப்பராயன் கோவில் நான்காவது வீதியில் வசித்து வந்த,  கொடைக்கானல் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த சையது இப் ராகிம் (20) ஆகிய இருவரை தனிப்படையினர் கைது செய்த னர். ஒன்றிய, மாநில அரசு இயந்திரங்களைச் சீர்குலைத்து மத  நல்லிணக்கத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவித்து, வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து  கொண்டதால் இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் சா.பிரபாக ரன் உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட சிறையில்  இருந்த இருவரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.

ரூ.4.60 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

அவிநாசி, அக்.15- தங்கக்கட்டி எனக் கூறி, பித்தளைக் கட்டியை கொடுத்து  ரூ.4.60 லட்சம் மோசடி செய்த இருவரை அவிநாசி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். விருதுநகர், அருப்புக்கோட்டையை சேர்ந்த விஸ்வநா தன், சுரேந்திரன் ஆகியோர் கோவைக்கு தங்க கட்டி வாங்க  வந்துள்ளனர். அப்போது ஏற்கனவே அறிமுகமான கோவை யைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் தன்னிடம் ரூ.4.60 லட்சம்  மதிப்பில் 100 கிராம் தங்ககட்டி இருப்பதாகவும், அதை அவி நாசி அருகே தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து  ரொக்கம் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள் ளார். அதன்படி விஸ்வநாதன், சுரேந்திரன் ஆகியோர் வெள் ளிக்கிழமை காலை தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்தி ருந்த கோவையைச் சேர்ந்த வேலுசாமி, அவரது நண்பர் கணே சன் ஆகியோரிடம் ரூ.4.60 லட்சத்தை கொடுத்து 100 கிராம்  தங்ககட்டி வாங்கியுள்ளனர். பிறகு பிரித்து பார்த்ததில், அவர் கள் கொடுத்தது பித்தளைக் கட்டி எனத் தெரியவந்தது. இது  குறித்து அவிநாசி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து  கோவைச் சேர்ந்த வேலுசாமி, கணேசன் ஆகியோரை வெள் ளிக்கிழமை கைது செய்தனர்.

பேருந்து மோதியதில் 3 பேர்  பலி

தாராபுரம்,  அக். 15 - தாராபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து  மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில்  இருந்த மேலும் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரில் கயிறு தயாரிக்கும்  தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அசாம் மாநிலத்தை  சேர்ந்த ட்ரூபட் நர்சாரி (41), ரபிப் நர்சாரி (36), பிரஞ்சாய் நர்சாரி  (29) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஒரே பைக்கில் தாராபுரம்  ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சென்றபோது அரசு பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே  ட்ரூபட்  நர்சாரி, ரபிப் நர்சாரி ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயம டைந்த பிஞ்சாய் நர்சாரி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண் டன் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சூலூர் குளத்தில் மூழ்கி  3 சிறுவர்கள் உயிரிழப்பு

சூலூர், அக். 15 -  சூலூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரி ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள மதியழகன்  நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8),  சஞ்சீவ் (7). இதில், அகிலன், சஸ்வந்த்  இவர்கள் இருவரும்  சூலூர் மதியழகன் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் மூன்றாம்  வகுப்பு படித்து வருகின்றனர். சஞ்சீவ் தனியார் பள்ளியில்  இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர்களது பெற் றோர்கள் அனைவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள். இவர்கள் மூவரும் மதியழகன் நகர் அருகே உள்ள சூலூர்  சின்ன குளத்தில் விளையாட சென்றுள்ளனர்.   குளக்கரையில் விளையாடிய சிறுவர்களில் ஒருவன் தண்ணீரில் இறங்கி விளையாட முற்பட்டுள்ளார். அப்போது ஒருவர் திடீரென வழுக்கி  குளத்து தண்ணீருக்குள் விழுந்து  விட்டார். உடனே அவரைக் காப்பாற்ற மற்ற இரண்டு சிறு வர்களும் தண்ணீருகளுக்குள் இறங்கி உள்ளனர். அவர் களும் சேரில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை  அருகில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பார்த்து அக்கம்  பக்கம் உதவிக்கு அழைத்துள்ளார். அங்குள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித் தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப் புத்துறையினர் மூவரையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று  சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித் தனர். உடற்கூறாய்வுக்காக சிறுவர்களின் ஊடல்கள் கோவை  இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்ப வத்தை தொடர்ந்து அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவி னர்கள், அப்பகுதி மக்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

தாராபுரம், அக்.15- தாராபுரம் ஐந்து முனை  சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவ தாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல் துறையினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது ஐந்து முனை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப் படும்படியாக நின்றிருந்த நபரை அழைத்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முர ணாக பதில் கூறியதால், அவ ரிடம் நடத்தப்பட்ட சோதனை யில் அவர் தனது சட்டைப் பாக்கெட்டில் 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந் தது. இதையடுத்து அவரிடம்  மேற்கொண்ட விசாரணை யில் அந்த நபர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  கண்ணன் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்  மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப் பட்டார்.