districts

img

சிபிஎம் கல்வராயன் மலைக்கமிட்டி செயலாளராக ஏ.பாக்கியராஜ் தேர்வு

சேலம், நவ.17- மார்க்சிஸ்ட் கட்சியின் கல்வ ராயன் மலைக்கமிட்டி செயலா ளராக ஏ.பாக்கியராஜ் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம், கல்வராயன் மலைக்கமிட்டியின் 5 ஆவது  மாநாடு, கருமந்துறை பகுதி யிலுள்ள சமுதாயக்கூடத்தில் சனியன்று நடைபெற்றது. செங்கொடியை ஏ. பெரியகுள்ளன் ஏற்றி வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் எ.பொன்னுசாமி வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை டி.தர்மலிங் கம் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.ராமமூர்த்தி துவக்கவுரையாற்றினார். மலைக்கமிட்டி செயலாளர் ஏ.பாக்கியராஜ் அறிக்கையை முன்வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.பெரியசாமி வாழ்த்திப்  பேசினார். இம்மாநாட்டில், கிளாக்காடு முதல்  நாய்குத்தி வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும். வன உரி மைச்சட்டத்தின்படி, அனைவ ருக்கும் பட்டா வழங்க வேண் டும். மரவள்ளிக்கிழங்கு ஒரு  டன்னுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க  வேண்டும். கருமந்துறை பகுதி யிலுள்ள அரசு பண்ணையை,  சுற்றுலாத் தளமாக அறிவித்து,  மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் கல்வரா யன் மலைக்கமிட்டி செயலாளராக ஏ.பாக்கி யராஜ் மற்றும் 9 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.குணசேகரன் நிறைவுரையாற்றி னார். கமிட்டி உறுப்பினர் பி.சின்னமணி நன்றி  கூறினார்.