கோவை, ஜூலை 23- ஒன்றிய அரசு ஏற்கனவே அறி வித்த திட்டங்களே வந்து சேராத நிலையில், இப்போது அறிவிக் கப்பட்ட திட்டங்களும் வெறும் கண் துடைப்பே, ஒன்றிய அரசின் தற் போதைய பட்ஜெட் சிறுகுறு தொழில்களுக்கு எவ்வித நியாய மும் வழங்கப்படவில்லை என கோவை தொழில்முனைவோர்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ள னர். இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் எம்.ஜெய பால் கூறுகையில், கடந்த 2022 முதல் ஜவுளித் தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருவம் நிலையில், விஸ்கோஸ், பாலியெஸ்டர், பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப் பட்டு உள்ள கட்டுபாட்டை நீக்கும் படி அமைச்சகத்திடம் கோரியிருந் தோம். ஆனால், இந்த பட்ஜெட் டில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மூலப் பொருட்கள் சர்வதேச விலையை விட 20,25 கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால், எங்களால் சர்வதேச விலைக ளுக்கு ஜவுளி ஆர்டர்களை பெற இயலவில்லை. உள்நாட்டிலேயே பெரும்பாலானோர் வர்த்தகம் செய்வதினால், தேவைக்கு அதிக மான வரத்தினால் விலை சரிவ டைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய உற்பத்தியை குறைத்தோம். இதன் எதிரொலி யாக தொழிலாளர்கள் வேலை வாய்ப்பையும் தொழில்முனை வோர்கள் முதலீட்டையும் இழந்த னர். தற்போது பட்ஜெட்டில் எங்க ளின் கோரிக்கையை ஏற்று அரசு ஆவண செய்வார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். எந்த அறிவிப்பும் வராமல் ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர்களுக் கான எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை. ரூ.100 கோடி வரை எந்த அட மான பத்திரங்களும் இல்லாமல் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போல முன்பு அறி வித்த திட்டங்கள் ஏற்கனவே கடன் பெற்று உள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளினால் கிடைக்கவில்லை. தற்போது இது போன்ற நிபந் தனைகளே விதிக்கபட்டு உள் ளது. மத்திய அரசு சர்வதேச விலை யில் மூலப்பொருள் கிடைக்க செய்து, ஏற்றுமதியை அதிகரிக்கும் சலுகைகளை அறிவிக்க வேண் டும் என்றார். அமைப்பின் கோவை மாவட் டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், 2024 - 2025 க்கான மத்திய பட்ஜெட் அறி விப்பு குறு சிறு தொழில்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் தந்து உள்ளது. குறு சிறு தொழில்களுக் கான வங்கி வட்டி வீதம் 5% சத மாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை, ஜிஎஸ்டியில் ஜாப்ஆர்டர்களுக்கு 5% சதமான வரி குறைப்பு ஏற்கப்பட வில்லை, குறு சிறு தொழில்களுக்கு இயந்திரங்கள் கொள்முதலுக்காக 15% சதம் மானியம் வழங்குவது அறிவிப்புகள் இல்லை, கோவைக்கு மெட்ரோ திட்டத்துக் கான நிதி ஒதுக்கீடு இல்லை, தொழில் துறையினர் பயன்படுத்தி டும் மூலப்பொருள்களுக்கான விலை நிரணயம் கமிட்டி சம்மந்த மான அறிவிப்பு இல்லை, கோவை யில் குறுந்தொழில் முனைவோர்க ளுக்கான தொழில் பேட்டை அறி விப்பு இல்லை, குறு சிறு தொழில் களை முடக்கி வரும் சர்ப்பாஸ் சட் டத்தில் திருத்தம் அறிவிப்பு இல்லை, குறு சிறு தொழில் வளர்ச் சிக்கு உதவிடும் வகையில் தனி நிதி ஒதுக்கீடு இல்லை, பொதுவாக இந்த பட்ஜெட்டால் இயங்கி கொண்டு இருக்கும் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு எவ் விதமான பயனும் இல்லை என் றார். ஸ்டார்ட் அப் அகாதெமி தலை வர், ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், இந்த பட்ஜெட் வளர்ச்சியையும் தொலைநோக்கையும் உள்ளடக் கிய, சற்றே வரிச்சுமையை தாங்கிய பட்ஜெட் என்று சொல்லலாம். வரு மான வரி சட்டத்தில் நீண்ட கால மூல தன ஆதாயத்துக்கான வரி 20 சதவீ தத்தில் 12.5 சதவீதமாக குறைக்கப் பட்டிருந்தாலும், இதற்கான குறி யீட்டு நன்மை நீக்கப்பட்டுள்ளது. இதன் வரி விளைவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அசையா சொத்துகளை விற்பவர்களுக்கு இதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும். கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சி.சிவகுமார் தொழில் முனைவோருக்கு அவர்களது தொழில் வளர்ச்சி, அவர்கள் வாங்கும் சொத்து மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் மதிப்பீடு செய்யப்படும்.
நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்ப டும். அரசு, தனியார் பங்களிப்புடன் தொழிலாளர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். தாமிரம், இரும்பு உள்ளிட்ட 20 வகையான ஸ்கிராப் பொருள்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் ஆகிய அறி விப்புகளை வரவேற்கிறோம். அதே நேரம், நுகர்வோர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வரி விகித குறைப்பு, வங்கிக் கட் டண விகித குறைப்பு. நாடு முழுவ தும் ஒரே சீரான விலையில் மூலப் பொருள் கிடைக்க வழிவகை செய் தல் ஆகிய அறிவிப்புகளை வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். கோவை பம்ப்செட், உதிரிபா கங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ், முத்ரா கடன் தொகை உயர்த்தப் பட்டது வரவேற்கத்தக்கது. 24 இடங்களில் சிட்பி கிளைகள் அதிக ரித்தல், நாடு முழுவதும் 20 புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத் தக்கவை. தனி நபர் வருமான வரி விலக்கு ரூ. 3 லட்சத்திற்கு மேல் சிறிதும் அதிகரிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. விவசாயத் துக்கு பெரிதும் உதவும் மோட்டார் பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்ற மளிக்கிறது. இரும்பு, காப்பர், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப் பொருள்க ளின் கடுமையான விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த உறுதியான அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நாட்டில் 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத் தித் தரும் குறு, சிறு தொழில்முனை வோருக்கு எந்தத் திட்டமும் அறி விக்கப்பட்டவில்லை.