திருப்பூர், அக்.29– திருப்பூர் மாவட்ட வரைவு வாக்கா ளர் பட்டியல் செவ்வாயன்று வெளியி டப்பட்டது. இதில் இம்மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 11 லட்சத்து 68 ஆயிரத்து 197 ஆண்கள், 12 லட்சத்து 14 ஆயிரத்து 266 பெண்கள் மற் றும் 357 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளி யிட்டார். இதில் வரிசை எண் வாரியாக 8 சட்ட மன்றத் தொகுதி, அவற்றில் மறுசீரமைக் கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண் ணிக்கை, ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக் காளர்கள் உள்பட மொத்த வாக்காளர் கள் ஆகிய விபரங்கள் அடங்கிய பட்டி யல்: வரைவு வாக்காளர் பட்டியல்கள் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டி ருக்கும். தங்கள் பெயர் விபரங்களை வாக்காளர்கள் நேரில் பார்த்து சரி பார்த்துக் கொள்ளலாம். அத்துடன் 2025 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்க ளும், அந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, ஜூலை 1 ஆம் தேதி, அக்டோபர் 1ஆம் தேதிகளில் 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைக ளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர்களாக பெயர் சேர்த்துக் கொள்ளலாம். அந்தந்த தகுதி நாட்க ளில் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் சேர்த்துக் கொள்ளப்படும். இது தவிர http://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக வும், Voter Help Line கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பங்களைச் சமர்ப் பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகள் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் தார்.