நாமக்கல், மார்ச் 27- விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக திங்களன்று கல்லூரி மாணவர்களிடையே கையெழுத்து இயக்கத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆண்டகலூர் கேட் பகுதி யில், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அரசு கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க போவதாக, கடந்த சில வாரங்களாக வருவாய்த் துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடு பட்டனர். இது மாணவர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளையாட்டுத்துறை அமைச்ச ராக உதயநிதி ஸ்டாலின் பொறுப் பேற்ற பிறகு விளையாட்டுத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க் கப்பட்ட நிலையில், இருக்கின்ற மைதானமும், கைவிட்டு போகுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து,
இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களை கல்லூரி மாணவர்கள் முன்னெ டுத்து வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில், தொழில்நுட்ப பூங்கா அமைக்க கூடாது என்கிற ஒற்றை கோரிக்கையுடன் கடந்த வாரத்தில், உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, திங்களன்று அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், விளை யாட்டு மைதானத்தில் அமைய இருக்கும் தொழில்நுட்ப பூங்கா வினை, மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரி நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு ஏராமான மாணவர்கள் ஆதரவை அளித்தனர். முன்னதாக, இவ்வியக்கத் திற்கு மாணவர் சங்க நிர்வாகி யாழினி சரப்பிரியா தலைமை தாங் கினார். மாணவர் சங்க மாவட்ட தலைவர் மு.தங்கராஜ், செயலாளர் சரவணன் ஆகியோர் கையெழுத் திட்டு நிகழ்வை துவக்கி வைத்தனர். இதில், மாநிலக் குழு உறுப்பினர் தீபிகா, கல்லூரி கிளைச் செய லாளர் ஹரிஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர். இதில், ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்களிடம் கையெழுத்து பெறப் பட்டது. இதனைத்தொடர்ந்து, நாமக் கல் மாவட்ட ஆட்சியரிடம், விளை யாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்க முயற்சி களை கைவிட்டு மாற்று இடத்தில் தொழில் அமைக்க வேண்டும் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.