ஆட்சியர் அலுவலகம் அருகே தற்கொலை முயற்சி ஊடகத்தினரின் துரித நடவடிக்கையால் தப்பினார்
கோவை, நவ. 10- வேலை செய்த நாட்களுக்கான ஊதியம் வழங்காத விரக் தியில் மில் தொழிலாளி ஒருவர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனைக்கண்ட மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மாசானம்துரை என்பவர் துரிதமாக செயல் பட்டு அவரிடம் இருந்த தீப்பட்டியை பறித்து, காப்பாற்றினார். இதனையடுத்து, போலீசாரை வரவழைத்து அவரிடம் ஒப்ப டைத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணை மயில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ப தும், தற்பொழுது திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார். 20 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை அந்நிறுவனம் கொடுக்கவில்லை என்றும், தீபா வளி பண்டிகைக்கு பணம் இல்லை என்கிற விரக்தியில், தற் கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனைய டுத்து, பந்தய சாலை காவல் நிலையத்திற்கு ரவிச்சந்திரன் அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, தற்கொலைக்கு முயன்ற நபரை. ஒளிப்பதிவா ளர் மாசானம் துரை சந்திரன், சமயோசித சிந்தனையால், உயிரை காப்பாற்றியுள்ளார். செய்திக்களம் என்று நினைக்கா மல் ஒரு உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட மாசானம் துரையின் செயலுக்கு கோயம்புத்தூர் பத்திரிக்கை யாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மலை ரயில் சேவை முடக்கம்
மே.பாளையம், நவ.10- தொடர் கனமழை காரண மாக மலைரயில் பாதையில் ஏற்பட்டுள்ள சேதத்தால் வரும் 7 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்ப டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையின் பல இடங் களில் மண் சரிவுகள் ஏற்பட்ட தால், கடந்த 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை என மலைர யில் சேவை ரத்து செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து, பாதை சரிசெய்யப்பட்டு போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதி யில் வியாழனன்று இரவு கன மழை கொட்டித்தீர்த்தது. இத னால், மலைரயில் பாதை யில் மண்சரிவுகளும் தண்ட வாளத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.இதனையடுத்து வெள்ளிக் கிழமை(10.11.2023) முதல் 16 ஆம் தேதி வரை என 7 நாட் கள் தொடர்ச்சியாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்ப டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூய்மை தீபாவளி
நாமக்கல், நவ.10- பள்ளிபாளையம் ஆவ ரங்காடு கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது. மாண வர்களுக்கு பசுமை தீபா வளி, புகையில்லா தீபாவளி, தூய்மை தீபாவளி இவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட் டது. பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி நிகழ் விற்கு தலைமை தாங்கி னார். இந்த நிகழ்வில் பள்ளிபா ளையம் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.
குளம் நிரம்பி குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல்
கோவை, நவ.10- வடகிழக்கு பருவமழையால் செல்வபுரம் பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணிகுளம் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை யறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும், உடன் இருக்கி றோம் என்கிற நம்பிக்கையையும் அளித்த னர். கோவையில், பெய்து வரும் தொடர் கன மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை கள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், கோவையில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செல்வபுரம் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியது. குளத்தில் இருந்து வெளியேறிய வெள்ளம் செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். இதனையறிந்து, வெள்ளி யன்று பாதிக்கப்பட்ட பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஎம் கோவை மேற்கு பகுதி குழு உறுப்பினர்கள் பி.சந்தி ரன், ஏ.தாஸ் மற்றும் சிஐடியு கோவை மேற்கு பகுதி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பார் வையிட்டனர். மேலும், பாதிப்பிற்கு உள்ளான மக்களிடம் அறுதலையும், நம்பிக்கையை யும் அளித்தனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்
நீலகிரி, நவ.10- பந்தலூர் தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவையான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண் டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், எருமாடு, அம்பலமூலா, சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் தேவையான மருத்துவர்கள் இல்லாத காரணத் தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலை செய்யும் தொழிலாளர் கள் அதிகமாக உள்ள இந்த பகுதிகளில் மருத்துவர்கள் இல் லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய அவல நிலை உருவாகிறது. எனவே, உடனடியாக பந்தலூர் பகுதியில் உள்ள அனைத்து மருத்துமனைகளிலும் அவசர சிகிசைக்கு உதவும் வகையில் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் எரு மாடு ஏரியா கமிட்டி கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டது, இதில், கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், ஏரியா செயலாளர் கே.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனிபா மாஸ்டர் உள்ளிட்ட கட்சி உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்றம் செய்க
திருப்பூர், நவ.10 – திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள பழைய நீதி மன்ற வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர். இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், மங்க ளம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ஆகி யோர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனு வில் தெரிவித்துள்ளதாவது, இடுவாய், மங்கலம், ஆண்டி பாளையம் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களின் பத்தி ரப்பதிவு வேலைகளுக்காக இங்கிருந்து 25 கிலோ மீட்ட ருக்கும் அதிகமான தூரத்தில் நெருப்பெரிச்சலில் அமைந் துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி யுள்ளது. இது மிகவும் சிரமத்தை உண்டாக்குகிறது. எனவே இந்தப் பகுதிகளுக்கான பத்திரப்பதிவு அலுவ லகத்தை முன்பு அலுவலகம் செயல்பட்டு வந்த, பழைய நீதி மன்ற வளாகத்தில் அமைத்து தர வேண்டுமென வலியு றுத்தியுள்ளனர்.
அரசு பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
கோவை, நவ.10- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ தடுப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை தமிழக தீயணைப்புத்துறை மேற் ்கொண்டு வருகிறது. பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் தீயணைப்புத்துறையினர் அங்கு மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையை செய்து காண்பித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள் ளியில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் எண்ணெய் பொருட்களில் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்த செயல்முறை விளக்கம் மாணவர்கள் மத்தியில் செய்து காண்பிக் கப்பட்டது.
ஆவின் குடிநீர் இப்போதைக்கு இல்லை: அமைச்சர்
சென்னை, நவ.10- ஆவின் பால், பால் உப பொருட்கள் விற்பனை அதிகரிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால் தற்போதைக்கு ஆவின் குடிநீர் தயாரிப்புக்கு சாத்தியக்கூறு கள் இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரி வித்தார். சென்னை நந்தனம் ஆவின் இல்லத் தில் நடைபெற்ற நிகழ்வில் தீபாவளியை யொட்டி ஆவின் நிறுவன பணியாளர்க ளுக்கு போனஸ் தொகையை அமைச் சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆவின் நிறுவனத்தில் பணி புரியும் 4,070 பணியாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5.96 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். ஆவின் நிர்வாகத்தில் இருந்த பல நிர்வாக குறைபாடுகள் சரி செய் யப்பட்டு தற்போது நிலையான வளர்ச் சியை ஆவின் எட்டியுள்ளது. சிறப்பாக இயங்கி வரும் பால் உற்பத்தியா ளர் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். பால் உற்பத்தி விவசாயிகளிட மிருந்து பால் வாங்கும் இடத்திலேயே அதன் தரம் கண்டறியும் திட்டத்தின் மூலம் தற்போது பெறப்படும் பாலின் தரம் உயர்ந்துள்ளது என்றும் அமைச் சர் தெரிவித்தார்.