கோவை, மார்ச் 21- அரசு ஊழியர்கள் குடியி ருப்புக்குள் புகுந்த மஞ்சள் சாரை பாம்பு பிடிபட்டது. கோவை, காமராஜர் சாலை ரெட்பீல்டில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 60க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில் இங்கு பழைய பாழடைந்த வீடு ஒன்று இடிந்தநிலையில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு பாம்புகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று மதியம் அரசு ஊழியர் குடியிருப்பு சுற்றுச் சுவர் அருகே பாம்பு ஒன்று புகுந்து இருந்தது. இதைப் பார்த்ததும் அரசு ஊழியர் களின் குடும்பத்தினர் அலறி யடித்து ஓடினர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பாம்பு பிடிக்கும் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர் அமீன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அமீன் அரசு ஊழியர் ஒருவரின் வீட்டின் கார் ஷெட் கவரில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அது சுமார் 3 அடி நீளம் கொண்ட மஞ்சள் நிற சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த பாம்பை சாக்குக்குள் போட்டுக் ்கொண்டு வனத்தில் விட எடுத்து சென்றார். மேலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அருகே புதர்களை அகற்றிட அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.