districts

img

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்சனையில் சுமுக தீர்வு

திருப்பூர், பிப்.22- அதிமுகவை சேர்ந்த நடராஜ் என்ப வர் வேலாயுதம்பாளையத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்தது தொடர்பான  பேச்சுவார்த்தை வியாழக்கிழமை வட் டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற் றது. இதில் சுமுகமான முடிவு எட்டப்பட் டது. அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் நூற்  றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். அதேபகுதியில் குலதெய் வக் கோவில்  கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகே வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த நடராஜ் தனது வீட்டுக்குச்  செல்வதற்காக கோவில் வழித்தடத்தை  பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நடராஜ் கோவில் அருகே இருந்த வேல், மேற்கூரை உள்ளிட்ட வற்றை அகற்றி,  கல் ஒன்றை நட்டு வைத்து பாதையை அடைத்ததால், பொது மக்கள்  பாதையை பயன்படுத்த  முடியாத நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அவிநாசி வட்டாட்சியரி டம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. திருவிழா  நடைபெற உள்ள நிலையில், கோயில்  மேற்கூரையும் அகற்றியது குறித்து நட ராஜிடம் அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி பாதை தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பொதுக் கிணறு தான் இருந்தது எனக் கோரி, காலப்போக்கில் மறைந்த அந்த கிணற்றை அப்பகுதி  மக்கள் கடந்த வாரம் தோண்டும் பணி யில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ  இடத்திற்கு வந்த வருவாய்த் துறையி னர் மற்றும் காவலர்களிடம், பழைய வரு வாய் பதிவேட்டை காண்பித்தால் மட் டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதற்கு வருவாய்த் துறையினர் ஒரு வாரக்காலம் அவ காசம் கேட்டதை தொடர்ந்து கிணறு தோண்டுவதை தற்காலிகமாக நிறுத் தினர். இந்நிலையில், வட்டாட்சியர் அலுவ லகத்தில் வியாழக்கிழமை அமைதிப்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த நடராஜிடம் வட் டாட்சியர் மோகனன், துணை காவல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு  தரப்பினரும் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி சுமுகமாகப் பேசி  முடித்தனர். மேலும், இரு தரப்பினரிட மும் ஒப்புதல் பெற்று கையொப்பம் பெற்றுக் கொண்டனர்.