districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாகனங்களை துரத்திய ஒற்றை யானை

நீலகிரி, ஜூன் 4- நீலகிரி அருகே சாலையில் சென்ற வாகனங்களை ஒற்றை  யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.  நீலகிரி மாவட்டம், மஞ்சூர்-கெத்தை மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த  யானைகள் அவ்வப்போது சாலைகளில் உலா வரும் போது  வாகனங்களை வழிமறித்து,  பின்னர் வனப்பகுதிக்குள் செல் கின்றன. இந்நிலையில், கூட்டத்தில் இருந்து வெளியேறிய குட்டியானை ஒன்று கெத்தை மையப் பகுதியில் உள்ள சாலையில் அங்கும் இங்கும் உலாவியது. ஒரு கட்டத்தில் பிளீறிக் கொண்டு ஓடிய காட்டு யானையைக் கண்டு காரில்  வந்தவர்கள் அச்சமடைந்தனர்.  மேலும், காரை பார்த்ததும் காட்டு யானை தாக்க வருவதை  கண்டு, காரில் வந்தவர்கள் பின்னோக்கி சென்று தப்பினர்.  இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேர மாக அங்கும் இங்கும் சாலையிலேயே உலாவிக் கொண்டி ருந்த காட்டு யானை, பின்பு வனப்பகுதிக்குள் சென்ற வுடன் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந் தனர்.

புகையிலை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கோவை, ஜூன் 4- கோவை அருகே புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் மே 31 ஆம் தேதியன்று உலக புகை யிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி பொள்ளாச்சியில் தமிழ்நாடு பல் மருத்துவ சங்கம், தடகள சங்கம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து  புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது.  இதில் 19 வயதிலிருந்து 80 வயதிற்கு உட்பட்டவருக்கு 7.5  கிலோமீட்டர் தூரமும், 13 வயதிலிருந்து 18 வயதிற்கு  உட்பட்டோருக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும், 6 வயதில்  இருந்து 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 2.5 கிலோ மீட்டர்  தூரம் என மூன்று பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து  புளியம்பட்டி பி ஏ காலேஜ் வரை நடைபெற்றது. போட்டியில்  ஆறு வயது சிறுவர், சிறுமியர் முதல் 80 வயது வரை உள்ள  ஆண்கள், பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டி யில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு ரேக்ளா போட்டி

பொள்ளாச்சி, ஜூன் 4- முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடை பெற்றது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 900 காளை மாடுகள்  பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இதில்  கோவை, ஈரோடு, சேலம் மற்றும் கேராளவை சேர்ந்த வர்கள் போட்டியில் பங்குபெற்றனர். 200 மீ, 300 மீ என போட்டி  நடைபெற்றது.  இன்றைய இளைஞர்களின் மத்தியில் நாட்டு மாடுகளை  பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட காளைகள் சீறி பாய்த்தது பார்ப்பவர்களை மிரள செய்தது.  இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராள மான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி கண்டு மகிழ்ச்சி அடைத்தனர், வெற்றி பெற்ற காளை உரிமை யாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தனியார் மருத்துவமனை செவிலியர் தற்கொலை?

கோவை, ஜூன் 4- கோவையில், தனியார் மருத்துவமனை செவிலியர் தூக் கிட்ட நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இது தற் கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ், அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன்  உள்ளார். இவர்கள் சிறிது காலம் மும்பையில் வசித்துள் ளனர்.  கடந்த வருடம் முத்துராஜ், தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை, வடவள்ளி வி.என்.ஆர் நகரில் வாடகை  வீட்டில் வசித்து வருகின்றனர். ராமலட்சுமி கோவையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக   பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் ராமலட்சுமி, வீட்டில்  உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கி  கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் சத்தம்  போட்டார். இச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து  ராமலட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற  போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து  உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ராம லட்சுமி மரணம் குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை  நடத்தினர்.  இதற்கிடையே ராமலட்சுமியின் தந்தை, தனது  மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், முத்துராஜ்  தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும், அவர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  கணவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக  கூறுகிறார். ஆனால் கழுத்தில்அதற்கான தடயங்கள்  இல்லை. இதனால் செவிலியர் மரணம் சந்தோகம் இருப்ப தாக தெரியவருகிறது.  இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் வீசப்படும் குப்பைகள்

நீலகிரி, ஜூன் 4-  ஊட்டி நகராட்சி நிர் வாகம் சார்பாக தினந் தோறும் காலை,மாலையில் என நகராட்சி குப்பை வாக னங்களில் வந்து குப்பைப் பெற்று செல்கின்றனர். இருப்பினும் இரவு நேரங் களில் வாகனங்களில் எங் கெங்கிருந்தோ வந்து மூட்டை, மூட்டையாக குப்பைகளை வீசி செல் கின்றனர். இதில் பிளாஸ்டிக் மற்றும் வாழை இலைகள்  அதிகமாக காணப்படு கின்றது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் இது போல் சாலைகளில் குப்பை களை வீசுபவர்களை கண் காணித்து கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் விபத்து: பள்ளி மாணவர்கள் அஞ்சலி

கோவை, ஜூன் 4- ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு பள்ளி மாணவர்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ரயில் போல வண்ணம் பூசப்பட்டு தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு வகுப்பறைகளும் ரயிலின் பெட்டிகள் போல காட்சியளிக்கிறது.  இந்நிலையில், ஒடிசாவில் மூன்று ரயில் கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 275 பேர் உயிரி ழந்தனர்.  இம்மக்களுக்கு அஞ்சலி செலுத் தும் விதமாக, பெத்தநாயக்கனூர் அரசு  உயர் நிலைப் பள்ளியில் ரயில் பெட்டிகள் போல  உள்ள வகுப்பறைகள் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி எந்தியபடி பள்ளி மாண வர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ரூ.6.50 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தருமபுரி, ஜூன் 4- அரூரில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.6.50 லட் சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தரும புரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு  முறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவ சாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் 125 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்தனர். விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் (100  கிலோ) ரூ.5 ஆயிரத்து 779 முதல் 6 ஆயிரத்து 579 வரை ஏலம் போனது. மேலும், குண்டு ரக கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 419 முதல் 6 ஆயிரத்து 69 வரையிலும் விற்பனை யானது. மொத்தம் ரூ.6.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது.

இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ

சூலூர், ஜூன் 4- சூலூர் அருகே விவசாய தோட்டத்தில் பலமான இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பதுவம் பள்ளியை அடுத்த ராயர்பாளையம் பகுதியில் எஸ்.ராமச்சந்தி ரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இப்பகுதி யில் திடீரென மழை பெய்து கொண்டிருந்தபோது,  கனத்த இடி  சத்தம் கேட்டுள்ளது. அப்போது அவரது தோப்பிலிருந்த  தென்னை மரம் ஒன்றில் இடி விழுந்து, தீ பற்றியுள்ளது. தீ வேகமாக மரம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தோட்டத்து உரிமையாளர் ராமச்சந்திரனின் மகன் செல்போனில் படம் பிடித்து உள்ளூர் வாட்ஸ் ஆப் குரூப்பு களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங் களில் பரவி வைரலாகி வருகிறது.

பராமரிப்பு பணி: நாளை மின்விநியோகம் நிறுத்தம்

நாமக்கல், ஜூன் 4- பராமரிப்பு பணிகள் காரணமாக எருமப் பட்டி, கபிலர்மலை பகுதிகளில் செவ்வா யன்று (நாளை) மின்சார விநியோகம் நிறுத் தம் செய்யப்பட உள்ளன. எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் செவ்வாயன்று (நாளை) பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. இதனால் எருமப் பட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி அலங்கா நத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப் பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ் செட்டி, வரதராஜபுரம், சிங்களம் கோம்பை, காவக்காரபட்டி, பவித்திரம் புதூர், செல்லி பாளையம், கஸ்தூரிபட்டி ஆகிய இடங்களில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா, கபி லர்மலை துணை மின்நிலையத்தில் செவ்வா யன்று (நாளை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளை யம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல் பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ் சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளை யம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம் பாளையம், பெரியசோளிபாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணா நகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப் புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்த ளம், பொன்மலர்பாளையம், காளிபாளை யம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தக வலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன், வரதராஜன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

அன்னூர்: சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

அன்னூர், ஜூன் 4- அன்னூர் அருகே ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த வேன் ஒன்று, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான தில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் உயிர் தப்பினர். கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள பெரியமத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 பேர் வேன் ஒன்றில் திருவண்ணா மலை கோவிலுக்கு சென்று விட்டு, அன்னூர் வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக சாலையில் தலைகுப் புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற் பட்டவர்கள் லேசான காயத்துடன் உயிர்  தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று, காய மடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர். இந்த விபத்தால் மேட்டுப்பாளை யம் -  அன்னூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீ சார் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மினி  வேனை மீட்டு அப்புறப்படுத்தினர். இச்சம்ப வம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

200 வீடுகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி

உதகை, ஜூன் 4- தெப்பக்காட்டில் 200 வீடுகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை மாவட்ட ஆட்சியர் சா.ப.அமரித் வழங்கினார். நீலகிரி மாவட்டம், முதுமலை கிராமத்தில் பழங்குடி யின நல சங்கம் சார்பில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் இல்லாமல் குறைந்த விலையில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி வடிவ மைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காடு யானைகள் முகாம் கூட்டரங்கில் நடை பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைப்பாடி, தேக்குபாடி, கார்குடி, லைட் பாடி ஆகிய 4 கிராமங்களில் 350 வீடுகள் உள்ளன. அங்கு இதுவரை 200 வீடுகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி இல வசமாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் குழந்தை களை பெற்றோர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கூடலூர் வன அதிகாரி கொம்மு ஒம் காரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கூடலூர் ஊராட்சி ஒன் றிய தலைவர் கீர்த்தனா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு, ஜூன் 4- சத்தியமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி காவல் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், சனியன்று இரவு சாம்ராஜ் நகரி லிருந்து நான்கு சக்கர லோடு வாகனம் வந்து கொண்டி ருந்தது. இதற்கிடையே காவல் துறையினருக்கு கிடைத்த தக வலையடுத்து, வெங்காய லோடு ஏற்றி வந்த அந்த வாக னத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வாகனத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 956 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 1,281 கிலோ  ஆகும். இதனையடுத்து வாகனம் மற்றும் அதிலிருந்த பொருட் கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம், ஜூன் 4- மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் அளவு விநாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மலையின் காரணமாக, ஞாயிறன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1804 கன  அடியி லிருந்து 2267 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயர தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஞாயி றன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.70 அடியிலி ருந்து 103.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.76 டிஎம்சியாக உள்ளது.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூன் 4- தருமபுரியில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு சனியன்று 3  ஆயிரத்து 125 கிலோ பட் டுக்கூடு கொண்டு வரப்பட் டன. இதில் ஒரு கிலோ பட் டுக்கூடு அதிகபட்சமாக ரூ.545க்கும், குறைந்தபட்ச மாக ரூ.240க்கும், சராசரி யாக ரூ.397.74க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 922க்கு வர்த்தகம் நடைபெற்றது.