districts

தமுஎகச சார்பில் குறும்பட பயிற்சி முகாம் ஆக 13 திருச்செங்கோட்டில் நடைபெறுகிறது

நாமக்கல், ஜூலை 29- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் குறும்பட பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாமக்கல் மாவட்டக் குழு சார்பில் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று ஞாயிறன்று காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்செங்கோடு, கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடைபெறறுகிறது.  இதில், இளைஞர்களிடம் குறும்படம் எடுப்பது குறித்த ஆர்வத்தை அதிகரிப்பதுடன், அது குறித்த நுட்பங்களை அறிய பயிற்சி அளிக்கப்படும். மேலும் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் குறித்து பயிற்சி அளிப்படுகிறது.  இந்த பயிற்சி முகாமில் தமிழ் சினிமா முன்னணி இயக்குநர், கதையாசிரியர் மற்றும் குறும்பட இயக்குநர்கள்  கலந்து கொள்கிறார்கள். மேலும், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, தமுஎகச திரை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி, மாநில துணைச் செயலாளர் அ.கரீம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.    மேலதிக தகவல்களுக்கு, திவாகர் 95975-05441,  கோபி 7010071644 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தமுஎகச திருச்செங்கோடு நகரக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.