குழந்தை பெற்ற பள்ளி மாணவி போக்சோவில் ஒருவர் கைது
உதகை, டிச.11- உதகை அருகே பாலியல் வன்கொடுமையால் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக, போக்கோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள் ளார். நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த கூலி வேலை செய் யும் தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை கருத்து வேறுபாடு கார ணமாக குடும்பத்தை விட்டு தனியாக சென்று விட்டதால், மாணவி தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். இந் நிலையில், மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது வயிறு வலி அதிகமான தால் உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள், மாண வியை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் கருவுற்றது தெரியவந்தது. மேலும், மாணவியின் உடல்நிலை பாதுகாப்பு கருதி மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந் தது. இந்நிலையில், குழந்தையின் தாயார் இதுகுறித்து குன் னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், குன்னூர் அருகே உள்ள கே.எம்.கே தெருவைச் சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி தம்பா என்ற குணசேகரன் (50), கடந்த மார்ச் மாதம் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து குணசேகரனை போக்சோ சட் டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
மலை ரயிலில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம்
உதகை, டிச.11- கோவை மாவட்டத்திலுள்ள உதகைக்கு மலை ரயிலில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உத கைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலே யர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மலை ரயிலில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, மேட்டுப் பாளையம் - குன்னூர் இடையே நீர்வீழ்ச்சிகள், குகைகள், அடர்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகளை கண்டு ரசிக்க லாம். இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவ லாக மழை பெய்து வருகிறது. மேலும், பனிமூட்டம் காரண மாக கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குன் னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்காக சுற்றுலா பயணி கள் காத்திருந்தனர். இதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏறி சுற்றுலா பயணிகள் உதகைக்கு சென்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மாறுபட்ட காலநிலையில் மலை ரயிலில் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தை யும், மகிழ்ச்சியையும் தருவதாக கூறினர்.
தற்கொலை
ஈரோடு, டிச.11- ஈரோடு மாவட்டம், கருங் கல்பாளையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு வந்தார். இதனால் வாழ்க் கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதன்பின் மயங்கி விழுந்த அவரை அவ்வழி யாக சென்றவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ஈரோடு அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
லாட்டரி விற்பனை ஏழு பேர் கைது
திருப்பூர், டிச. 11- திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமுருகன் பூண்டி ஆலங்காடு பகுதியில் அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக இளைய ராஜா (29), காளிதாஸ் (22), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப் பட்ட லாட்டரி மற்றும் நான்கு செல்போன்கள், மூன்று சக்கர வாகனங்கள், பணம் ரூ.24 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப் பட்டது. அதேபோல் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோல்டன் நகர் பகுதியில் வேலாயுத பெருமாள் (23) கைது செய்யப்பட்டார். 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சலவை பட்டறை பகுதியில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணம் ரூ.71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மத்திய காவல் எல்லைக்கு உட்பட்ட செக்கு கார தோட்டம் பகுதியில் கைலாசநாதன் (27), நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளக்காட்டுப் புதூரில் நந்த குமார் என்கிற ஐயப்பன் (45) ஆகியோரே காவல் துறை யினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத் தனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் பணம் ரூ.2550-ஐ காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் டிச. 14, 15 தேதிகளில் கல்விக் கடன் முகாம்
திருப்பூர், டிச. 11 - திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல் விக் கடனுக்காக விண்ணப்பிக்க ‘சிறப்பு கல்விக் கடன் முகாம்’ வரும் டிசம்பர் 14, 15 தேதிகளில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித் துள்ளார். திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்விக் கடன் வழங்கும் இந்த முகாம் ஆட்சியர் அலுவலகத் தில் தரை தளத்தில் உள்ள அறை எண் 20இல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அன் றைய தினமே கடன் அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள் ளார். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www. vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை, தேவைப்படும் ஆவணங்களுடன் பதி வேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப் பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்க ளாக இருப்பின் முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களு டன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய 0421-2971185 என்ற எண்ணில் மாவட்ட முன் னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூலனூரில் பருத்தி ஏலம்
தாராபுரம், டிச.11 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.64 லட்சத் திற்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் கூறியிருப்ப தாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 246 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9 ஆயிரத்து 558 ம், குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 50 ம், சராசரி விலை யாக ரூ.8 ஆயிரத்து 640 க்கும் விலை போனது. மொத்தம் 2313 மூட்டைகள் 774 குவிண்டால் பருத்தி ரூ.64 லட்சத்து 62 ஆயிரத்து 804-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 11 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற் கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய் திருந்தார்.
ஆன்லைன் டிரேடிங்கில் மோசடி- கைது
திருப்பூர், டிச.11 - ஆன்லைன் டிரேடிங்கில் பணம் கட்டினால் கமிசன் தருவ தாக கூறி மூன்று நபர்களிடன் இருந்து ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்து 403 பணத்தை பெற்று ஏமாற்றியவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பொல்லிகாளி பாளையம் பகுதியைச் சேர்ந்த யாசர் அராபத் (33) குடும்பத் துடன் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த செப்டம்பர் 25 அன்று தனது நண்பர் சபரீசன் மற்றும் மணிகண்ட பிரபு ஆகியோர் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் பற்றி விளக்கியதாகவும், அவர்கள் அதில் முதலீடு செய்துள்ளதாகவும், பாதுகாப் பானது எனவும் கூறியுள்ளனர். பணத்தை அவர்கள் கூறிய அடிப்படையில் ரூ.73 ஆயிரத்து 500 செல்போன் மூலம் அவர்கள் கொடுத்த இணைப் பில் யாசர் அராபத் அனுப்பி இருக்கிறார். ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை ரொக்கமாகவும், மொத்தமாக ரூபாய் 2 லட்சத்து 53 ஆயிரத்து 500 பணத்தை கொடுத்ததாகவும், ஏற்கனவே சபரீசன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோர் மேற் கண்ட இணைப்பில் ரூ. 2 லட்சத்து 85 ஆயிரத்து 903 பணத்தை முதலீடு செய்து இருந்ததாகவும், அவர்கள் கொடுத்த இலக்கை முடித்தால் பணத்தை கமிசனுடன் திரும்ப ஒப்படைப்பதாக கூறியவர், அதன் பிறகும் மொத்தம் ரூ. 5 லட்சத்து 39 ஆயிரத்து 403 பணத்தை தராமல் மேலும் 1 லட்சத்து 38 ஆயிரம் பணம் கேட்டதால் தாங்கள் ஏமாற்றப் படுவதாக அச்சப்பட்டுள்ளனர். இது குறித்து இணையம் வழியாக புகார் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை யினர் அந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடு பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் என்.சந்தோஷ்குமார் (54) என்பவரை வெள்ளியன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வங்கி கணக்கு முடக்கப் பட்டது.
மின்தடை
பல்லடம், டிச.11- பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் நடைபெற வுள்ள மாதாந்திர பாரா மரிப்புப் பணிகள் காரணமாக 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித் துள்ளார். மின்தடை ஏற்படும் பகுதி கள் விவரம் வருமாறு:- செம்மிபாளையம், சுக்கம் பாளையம், காளிவேலம் பட்டி, லட்சுமி மில்ஸ், சாமி கவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகர், சின்னியம்பாளையம், ரங்க சமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
தாராபுரம், டிச.11- தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புகண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன் சில நகராட்சிகளிலும், தீபாவளிக்கும் பின் சில நகராட்சிகளிலும் ரூ.1000 போனசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தாராபுரம் நகராட்சியில் இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு மற்ற நகராட்சிகளில் வழங்கிது போல் ரூ.1000 போனசாக வழங்கவேண்டும், இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான் இறைச்சி பதுக்கல்: அதிமுக பிரமுகர் கைது
திருப்பூர், டிச.11- உடுமலை அருகே மான் இறைச்சியைப் பதுக்கி வைத்தி ருந்த அதிமுக பிரமுகரை வனத்துறையினர் சனியன்று கைது செய்தனர். இதுகுறித்து உடுமலை வனத்துறையினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திரு மூர்த்தி நகர் சாம்பல்மேடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இந்த மானை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக அண்ணா தொழிற் சங்க நிர்வாகி செந்தில்ராஜ் (51) என்பவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் உடுமலை வனச் சரகர் சிவகுமார் தலைமையிலான வனத் துறை அதிகாரிகள் செந்தில்ராஜின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மான் இறைச்சியைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்ராஜைக் கைது செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளநோட்டு: இளைஞர் கைது 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
கோவை, டிச.11- கோவை அருகே டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்ற இளைஞர் 500 ரூபாயை கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட காசாளர் அதனை சரிபார்த்தபோது அது கள்ள நோட்டு என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மற்ற ஊழி யர்கள் துணையுடன் இளைஞரை மடக்கிப்பிடித்து குனிய முத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் கோவைபுதூர் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந் தது. மேலும், ரமேஷ் இந்த கள்ள நோட்டுகள் கீழே கிடந்த தாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த கள்ள நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடுவது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ரமேஷிடம் போலீசார் நடத்திய மேல் விசாரணையில், அவர் 500 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்ததை ஒப்புக்கொண் டார். இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் அந்த இளைஞ ரிடமிருந்து ரூபாய் 28 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரலாம்
ஈரோடு, டிச.11- மொடக்குறிச்சி அருகே மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர், பட்டாசு பள்ளி, அண்ணா நகர் பகுதியில் உள்ள தென்னந் தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்து கடந்த நவ.15 ஆம் தேதி பிறந்த ஒரு பெண் குழந்தை காவல்துறை மூலம் மீட்கப்பட்டது. அக்குழந்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு பிறகு ஈரோடு குழந்தைகள் நலக்குழு வில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலுவலகம், 6 ஆவது தளம் (புதிய கட்டிடம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு – 11 என்ற முகவரியிலோ, 0424 – 2225010 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது dcpserodes@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் யாரும் உரிமை கோராத பட்சத்தில் இணை யத்தின் மூலம் பதிவு செய்து குழந்தை தத்துக்கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித் துள்ளார்.
கோவை: வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி
கோவை, டிச.11- கோவை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் உயிரி ழந்தனர். திருப்பூர் மாவட்டம், முத்தூ ரைச் சேர்ந்த தங்கவேல் (44), பழனிசாமி என்பவருடன் கோவை - அவிநாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அவ்வழியாக வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற தங்கவேல் மற்றும் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை வீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தங்கவேலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். மேலும், பழனிசாமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிழக்கு மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கருமத்தம்பட்டி யைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). சலூன் கடை நடத்தி வரும் இவர், அன்னூர் - கருமத்தம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சாலையை கடக்க முயற்சி செய்த போது, அந்த வழியாக வந்த மினி லாரி மோதி, தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரி வித்தார். இதுகுறித்து கருமத் தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போத்தனூரைச் சேர்ந்த வில்லியம் (63) என்பவர் நரசிம்மநாயக்கன்பாளையம் - பெரியநாயக்கன்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த விக்ரம் (22), இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் என்பவருடன் அன்னூர் - சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், விக்ரம் வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்ற வருகிறார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் கவுன்சிலர் மீது ஆட்டோ தொழிலாளர்கள் புகார்
ஈரோடு, டிச.11- வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகக்கூறி ஆட்டோ தொழி லாளர்கள், முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகரில், பழையபாளையம் பிரிவில் உள்ளது மகாத்மா காந்திஜி நினைவு ஆட்டோ ஸ்டேண்ட். இங்கு கவுஸ் என்பவர் அப்துல் காதர் மற்றும் பாட்சா ஆகியோரு டன் சேர்ந்து, ரூ.50,000 பணம் வாங்கிக் கொண்டு ஸ்டேண் டிற்குப் புதிதாக சில நபர்களைச் சேர்த்து வருவதாக கூறப்படு கிறது. மேற்கண்ட நபர்கள், ஏற்கனவே ஸ்டேண்டில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை, ஆட்டோ ஓட்ட விடாமல் தடுப்பதுடன், தொடர்ந்து தகராறு செய்து வருகின்றனர். இத னால் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அமைதி யின்மை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அராஜகம் செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர் கவுஸ், அவருக்கு துணையாக உள்ள முன் னாள் கவுன்சிலர் ஆர்.அசோக்குமார், பாட்சா, ராஜா (எ) அப்துல்காதர் மற்றும் கவுஸ் மகன் சதாம் உசேன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்திஜி நினைவு ஆட்டோ ஸ்டேண்டில் வாக னத்தை நிறுத்தி, வாடகை எடுத்து ஆட்டோ ஓட்டவும், வாழ்வா தாரத்தை பாதுகாக்கவும் ஆவண செய்ய வேண்டுமென வலி யுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கண்மணி (எ) ஷேக் தாவூத் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்கள் காவல் துணை கண்காணிப்பாளரி டம் மனு அளித்தனர்.
ரேசன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ஈரோடு, டிச.11- பவானி குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், சனியன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளு டன் வந்தார். அவரை பின் தொடர்ந்த போது, காடையாம் பட்டி பகுதி ஒரு கொட்டகை யில் 2 மூட்டைகளையும் இறக்கி வைத்தபோது, அந்த மூட்டையில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குருப்ப நாயக் கன்பாளையம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (33) என் பவர் கைது செய்யப்பட்டார்.