தொழிலாளர் சட்டத்தில் 65 ஏ என்ற சட்டப்பிரிவை தமிழ்நாடு அரசு சேர்த் ததன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்ற அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்று தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித் திருந்தனர். குறிப்பாக, 65 ஏ சட்டப் பிரிவுக்கு எதிராக பல்வேறு தொடர் போராட்டங்களை அறிவித்திருந்த தொழிற்சங்கங்கள் முதல்வரின் அறி விப்பை வரவேற்றனர். அதேசமயம் இந்த சட்டத்தை நிறுத்தி வைத்தால் போதாது, சட்டமன்றத்தின் மூலம் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அரசின் அறிவிப்புக்கு ஏற்ப தொழிற்சங்கங்களும் தங்கள் போராட்ட அறிவிப்பை நிறுத்தி வைப்ப தாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத்தின் கௌரவத் தலை வரும், இந்தியா ஏற்றுமதிகள் சங்க கூட் டமைப்பின் தலைவருமான ஏ.சக்தி வேல் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் முதல்வர் சட் டத்தை நிறுத்தி வைப்பதாக கூறியிருப் பதற்கு ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இந்த சட்டத்தை ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி தொழி லாளர்களும் எதிர்பார்ப்பதாக கூறியி ருக்கிறார். எந்த தொழிலாளி இதை எதிர் பார்ப்பதாக அவரிடம் சொன்னார் என்று தெரியவில்லை.
திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரை பொறுத்தவரை, தொழி லாளர்கள் சட்டத்தை அமல்படுத்து வதில் அக்கறை இல்லாதவர்கள். சட் டத்தில் இருக்கும் விதிமுறைகளுக் கும், திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுவதற்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. குறிப் பாக, தொழிலாளர்களுக்கு சட்டப்படி இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யும் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் இருக்கக்கூடிய திருப்பூரில் அதில் 50 சதவிகித அளவிற்கும் குறைவா கவே இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய் யப்படுகிறது. இதைப்பற்றி எல்லாம் முத லாளிகள் அக்கறைப்படுவதில்லை. மேலும், திருப்பூரில் பனியன் நிறு வனங்களில் வேலை செய்வதில் நிரந் தர தொழிலாளர்கள் என்று ஏற்பாடும் மிகவும் குறைவு. கான்ட்ராக்ட், பீஸ் ரேட் என்ற முறையில் தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக வேலை வாங்கப்படுகின்றனர். குறிப் பாக, கான்ட்ராக்ட் முறை ஒரு தொழிற் சாலையில் பின்பற்றப்பட்டால் அதற்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் திருப் பூரில் அனேகமாக ஓரிரு நிறுவனங்கள் கூட கான்ட்ராக்ட் முறையில் தொழி லாளர்களை வேலை வாங்குவதாக பதிவு செய்திருப்பதில்லை.
எட்டு மணி நேரம் வேலை, கூடுதல் நேரம் வேலை வாங்குவதற்கு இரட் டிப்பு ஊதியம் என்பதெல்லாம் ஆகப் பெரும்பான்மையான நிறுவனங்க ளில் நடைமுறையில் இல்லை. சராசரி யாக 12 மணி நேரம் என்பதுதான் நடை முறையில் உள்ளது. அதுவும் தற் போது திருப்பூர் பின்னலாடை தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கக் கூடிய நிலையில்தான் வேலை குறைந்து போய் பல தொழிலாளர் களுக்கு வேலையில்லாத நிலையில், எட்டு மணி நேர வேலை என்பது நடை முறைப்படுத்தப்படுகிறது. இதுதான் திருப்பூரில் தொழிலாளர் சட்டம் நடை முறையாகும் லட்சணம். இதைவிட மோசமான விஷயம் உள் ளது. பின்னலாடை ஏற்றுமதி தொழி லாளர்களுக்கு தையல் தொழில்களுக் கான (டெய்லரிங் இண்டஸ்ட்ரி) குறைந்தபட்ச ஊதிய சட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் ஊதி யம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக அந்த டைலரிங் சட்டத் தில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப் படாத நிலையில், 2014 ஆம் ஆண்டு இந்த குறைந்தபட்ச ஊதியம் அரசால் சற்று உயர்த்தி அறிவிக்கப்பட்டது. சட் டத்தை அமல்படுத்தும் திருப்பூர் பின்ன லாடை தொழில் துறையினர் என்ன செய்தார்கள் தெரியுமா? அதில் உயர்த் தப்பட்ட ஊதியத்தை தொழிலாளர்க ளுக்கு தரவில்லை. மாறாக நூற்றுக் கும் மேற்பட்ட நிறுவனங்கள் நீதிமன்ற வழக்குக்கு போனார்கள். நீதிமன்ற மும் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும் என்று உறுதிப்படுத்தி விட்டது. நீதிமன்ற தீர்ப் பின்படியாவது ஊதியத்தை உயர்த்தி வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.
அப்போதைய ஆளும் அதிமுக அர சின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், பல்லடம் எம்எல்ஏவாக இருந்த கரைபுதூர் நடராஜன், திருப் பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.என். விஜயகுமார் ஆகியோர் துணையுடன், டெய்லரிங் குறைந்தபட்ச ஊதிய சட் டத்திற்கு மாறாக, நிட்டிங் தொழில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் என்று தனி யாக ஒரு சட்டத்தையே நிறைவேற்ற செய்தனர். இத்தகைய சட்டத்தை முறைப்படி சட்டமன்றத்தில் தான் நிறைவேற்ற முடியும். ஆனால் சட்ட மன்ற ஜனநாயகத்திற்கு புறம்பாக, நிர் வாக நடைமுறை மூலமாக இந்த சட் டத்தை அதிமுக அரசு நிறைவேற்றி யது. ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை கைவிட்டு நிட்டிங் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை, முத லாளிகள் தங்கள் செல்வாக்கின் மூலம் கொண்டு வர வைத்ததால், திருப்பூரின் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதத் திற்கு குறைந்தது ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை ஊதிய இழப்பு ஏற்பட் டுள்ளது. ஆக, தொழிலாளர் சட்டத்தை யும் ஒழுங்காக நடைமுறைப்படுத்த மாட்டார்கள், ஏதேனும் ஒரு அளவு பய னளிக்கும் அரசாணை, சட்ட உத்தரவு வந்தால் அதையும் எல்லா வகையிலும் சீர்குலைத்து இல்லாமல் செய்து விடு வார்கள் என்பதே நடைமுறை அனுபவ மாக உள்ளது.
இப்போது 65 ஏ சட்டம் கொண்டு வரப்பட்டது, இதற்கு முன்பாக பாஜக ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நிறைவேற்றியது. இவைதான் திருப்பூர் ஏற்றுமதியாளர்க ளுக்கு உவப்பான விஷயம். இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓவர் டைம் சட்டத்தை திருத்தம் செய்து, வாரம் 60 மணி நேரம் என மாற்ற வேண் டும் என்று கோரிக்கை வைத்ததும் இதே ஏ.சக்திவேல் தான். அப்போது திருப்பூர் சிஐடியு தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அக்கோரிக் கையை தொடர்ந்து எழுப்பாமல் கைவிட்டனர். தொழிலாளர் சட்டங்கள் முறை யாக அமல்படுத்தப்படாத நிலையில் தொழிலாளர்களின் உழைப்பு மிகக் கடுமையாக சுரண்டப்படுகிறது. சட்டப் படி 58 வயது வரை வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்கள் திருப்பூ ரில் நேரம், காலம் இல்லாமல், வரை முறை இல்லாமல் குறைந்த ஊதியத் தில் வேலை வாங்கப்படுவதால் உடல் நலம் குன்றி இயல்புக்கு முன்பாகவே தளர்ந்து போய், அதிகபட்ச 45, 50 வய துக்குள்ளாகவே தொழிலை விட்டு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல்வேறு உடல் நல, மனநல சிக்கல்க ளுக்கு ஆளாகி தற்கொலைகளும் அதி கம் நடைபெறும் இடமாக திருப்பூர் இருக்கிறது. வரைமுறையற்ற உழைப்பு சுரண்டல்தான் இதற்கு அடிப்படை யான காரணம்.
தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான வேலை நேரம், கௌரவமாக வாழ்வதற்கான நியாயமான ஊதியம், சமூக பாதுகாப்பு இவைதான் அடிப் படை அவசிய தேவையாகும். இவை யெல்லாம் முதலாளிகளுக்கு ஒரு போதும் அக்கரைக்கு உரியதாக இல்லை. எனவேதான் தற்போது 65 ஏ சட்டப்பிரிவை தமிழ்நாடு அரசே நிறுத்தி வைப்பதாக சொன்ன பிறகும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எவ்வித தயக்கமும் இல்லாமல், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக ஏ.சக்திவேல் துணிச்சலுடன் அறிக்கை வெளியிடுகிறார். மே தினத்தை கொண்டாடும் இந்த சூழ்நிலையில் திருப்பூர் தொழிலாளி வர்க்கம் இந்த முதலாளிகளின் நோக் கத்தை புரிந்து கொண்டு, தங்கள் கௌரவமான நல்வாழ்க்கைக்கான போராட்டத்தை வர்க்க உணர்வோ டும், வர்க்க ஒற்றுமையோடும் எழுச்சி யுடன் முன்னெடுக்க வேண்டும். இதுவே இந்த மே தினத்தின் உறுதி ஏற்பாக இருக்கட்டும்!!