திருப்பூர், நவ. 1 – இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பதினைந்தாவது தமிழ்நாடு மாநில மாநாடு வரும் நவம்பர் 4 முதல் 6 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இம்மா நாட்டை முன்னிட்டு கோவையில் இருந்து புறப்பட்ட வர்க்கப் போராளி தோழர் கே. ரமணி நினைவு ஜோதி பயணக் குழுவுக் குத் திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சிமிகு வர வேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் திருப்பூர் மாவட்டத்தின் தியாகி கள், தலைவர்கள் நினைவு ஜோதிகளும் பல் வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரப் பட்டு தோழர் கே.ரமணி ஜோதியுடன் சங்கமிக் கச் செய்து, மாநாட்டை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர். நவம்பர் 1ஆம் தேதி செவ்வாய்கிழமை கோவையில் இருந்து தோழர் கே.ரமணி நினைவு ஜோதிப் பயணக்குழு, சிஐடியு மாநிலச் செயலாளரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான கே.ரங்கராஜ் தலைமை யில் புறப்பட்டது. இப்பயணக்குழுவில் சிஐ டியு திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், தேனி மாவட்டச் செய லாளர் எம்.ராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட் டத் துணைத் தலைவர் ஆர்.பால்ராஜ், கோவை மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, கோவை மாவட்டத் துணைச் செயலாளர் கே.ரத்தினகுமார் ஆகியோர் பங் கேற்றுள்ளனர். கோவையில் இருந்து திருப்பூர் மாவட் டத்திற்கு வந்த ஜோதி பயணக்குழுவுக்கு அவிநாசி, அனுப்பர்பாளையம், எஸ்ஏபி உள் பட பல்வேறு இடங்களில் எழுச்சிமிகு வர வேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தியாகிகள், தலைவர்கள் நினைவு ஜோதிகள்
திருப்பூர் மாவட்டத்தின் மகத்தான தியா கிகள் ஆஷர் மில் பழனிச்சாமி, சீராணம்பா ளையம் பழனிச்சாமி, கேத்தம்பாளையம் பன் னீர்செல்வம், இடுவாய் கே.ரத்தினசாமி மற் றும் செங்கொடி இயக்கத்திற்காக அர்ப்ப ணிப்போடு பாடுபட்டு உயிர் நீத்த தலைவர் கள் கே.எஸ்.கருப்பசாமி, கே.தங்கவேல், என்.ஆறுமுகம், எஸ்.பி.கந்தசாமி, பி.முருகே சன், கே.பொன்னுசாமி, கே.ராமசாமி ஆகியோ ரின் நினைவு ஜோதிகள் மாவட்டத்தின் வெவ் வேறு பகுதிகளில் இருந்த செந்தொண்டர்க ளால் மாநாட்டுச் செய்தியை மக்களிடம் தெரி வித்தபடி திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பாக வந்து சேர்ந்தன. இங்கு தியாகிகள், தலைவர்கள் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆஷர் மில் தியாகி பழ னிச்சாமி நினைவு ஜோதியை சிஐடியு ஆட் டோ சங்க நிர்வாகி சிவராமன் வழங்க, பயணக் குழு சார்பில் ராமச்சந்திரன் பெற்றுக் கொண் டார். அதேபோல் சீராணம்பாளையம் பழனிச் சாமி தியாக ஜோதியை விசைத்தறி சங்க மாவட்டத் தலைவர் வேலுச்சாமி வழங்க, கே. ரங்கராஜ் பெற்றுக் கொண்டார். தியாகி பன் னீர்செல்வம் தியாக ஜோதியை பனியன் சங்க நிர்வாகி பாண்டியராஜன் வழங்க ஆர்.வேலுச்சாமி பெற்றார். தியாகி ரத்தினசாமி நினைவு ஜோதியை சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் வழங்க பால்ராஜ் பெற்றார். தோழர் கே. எஸ்.கருப்பசாமி நினைவு ஜோதியை பாத்திர சங்கச் செயலாளர் கே.குப்புசாமி வழங்க ரத் தினசாமி பெற்றார். தோழர் என்.ஆறுமுகம் நினைவு ஜோதியை குட்செட் சுமைப்பணி சங்கத் தலைவர் கனகராஜ் வழங்க சிஐடியு கட்டுமான சங்கப் பொதுச் செயலாளர் டி. குமார் பெற்றார். தோழர் கே.தங்கவேல் நினைவு ஜோதியை சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் செல்லதுரை வழங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் பெற்றார். சாலப்பாளையம் எஸ். பி.கந்தசாமி நினைவு ஜோதியை இன்ஜினிய ரிங் சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி வழங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் பெற்றார்.
தோழர் பி.முருகேசன் நினைவு ஜோதியை பஞ்சாலை சங்கச் செயலாளர் சி.ஈஸ்வர மூர்த்தி வழங்க, சிஐடியு போக்குவரத்து சங் கப் பொருளாளர் டெக் என்.சுப்பிரமணியம் பெற்றார். கே.பொன்னுசாமி நினைவு ஜோதியை உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகி சங்கர்குமார் வழங்க சிஐடியு விசைத்தறி சங்க மாநிலத் தலைவர் பி.முத்துசாமி பெற்றார். தோழர் கே.ராமசாமி நினைவு ஜோதியை கட்டிட சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராஜன் வழங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக் குழுவின் மாவட்ட கன்வீனர் எம்.பாக்கியம் பெற்றார். இந்த அனைத்து ஜோதிகளும் தோழர் கே. ரமணி நினைவு ஜோதியுடன் சங்கமிக்கச் செய்து இங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த னர். முன்னதாக பயணக்குழுவில் வந்த ஆர். வேலுச்சாமி, கே.ரங்கராஜ் ஆகியோர் சிஐ டியு மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் சிஐடியு நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பய ணக்குழு பல்லடத்திற்கு புறப்பட்டுச் சென் றது. அங்கு மறைந்த பல்லடம் வட்டார செங் கொடி இயக்கத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி நினைவு ஜோதியுடன் உடுமலைபேட் டைக்குச் சென்றனர். அங்கு தியாகி வெள்ளி யம்பாளையம் தியாகி ஈஸ்வரன் நினைவு ஜோதியும் சங்கமித்தது. இங்கிருந்து திண்டுக் கல் மாவட்டத்திற்குச் செல்கின்றனர்.