உடுமலை, ஜன.10- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் தலையீட்டின் காரணமாக உடுமலை யில் இயங்கி வந்த மனமகிழ் மன் றம் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. உடுமலை அரசு மருத்துவம னைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்த மான 97 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சில உள்ளூர் வசதி படைத்த நபர்கள் பல வருடகால மாக ஆக்கிரமிப்பு செய்து, மனமகிழ் மன்றம் என்ற பெயரிலும், வணிக நோக்கில் கடைகளையும் கட்டி வாடகை வசூல் செய்து வந்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியி னர் நடத்திய தொடர் போராட்டங் கள், தலையீடு காரணமாக கடந்த 2017 ஆம் வருடம் நகராட்சி ஆணை யர் சரவணக்குமார் சட்டவிரோத மாக இயங்கி வந்த கட்டிடங்கள் என மூன்று அறைகளுக்கு சீல் வைத்தார். இதன்பின்னர் வியாபார நோக்கில் கட்டபட்ட கடைகளுக்கும், முன் பகுதி வாயிலுக்கும் சீல் வைத்தனர். மேலும், மனமகிழ் மன்றம் உள்ள அனைத்து பகுதிகளும் உடுமலை நகாரட்சிக்கு சொந்தம் எனவும், விரைவில் இந்த இடம் பொது மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. அதனை தொடர்ந்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் பல போராட்டம் நடத்தியதன் விளைவாக கடந்த 2021 ஆம் ஜூலை மாதம் பேரிடர் மேலாண்மை சட்டத் தின்படி மனமகிழ் மன்ற கட்டிடம் கொரோனா பரிசோதனை மைய மாக மாற்றப்பட்டது. மேலும், மருத் துவமனை ஊழியர்கள் ஓய்வுக்கும், அரசு வாகனங்கள் நிறுத்தவும் அந்த இடம் பயன்படுத்தப்பட்டது. இச்சூழலில். கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் படிப்படியாக மீண்டும் மனமகிழ் மன் றமாக செயல்பட துவங்கியது. இதையடுத்து, இந்த இடத்தை நிரந்த ரமாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவனையின் விரிவாக்க பணிகளுக்கு இந்த இடத்தை பயன் படுத்த வேண்டும் என்று மார்க் ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.மேலும், இக்கோரிக்கைகளை முன் வைத்து போராட்ட இயக்கங்களும் தயாராகி வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி யின் தொடர் தலையீட்டின் விளை வாக தற்போது மீண்டும் மனமகிழ் மன்றம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.