districts

பிடிஓ முட்டுக்கட்டை - போராட தயாராகும் மக்கள்

திருப்பூர், ஏப்.17- சேகாம்பாளையம் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.14 லட் சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டித் தருவதற்கு தனியார் நிறுவ னம் தயாராக இருந்தும், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி கள்) தடையின்மைச் சான்று தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது,  பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் ஊராட்சி ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட, சேகாம்பாளையத் தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலை யில், இப்பகுதியில் செயல்பட்டு வரும் லீ சார்க் என்ற தனியார் பின்னல் ஆடை நிறுவனம், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை கட் டித் தருவதற்கு முன் வந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் தனியார் நிறுவ னம் வகுப்பறை கட்டித் தருவதற்கு அரசின் நிர்வாக அனுமதி தேவை என்ற அடிப்படையில் ஊராட்சி ஏழா வது வார்டு உறுப்பினரும், சேகாம்பா ளையம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஆர்.ஆனந்த ராஜ், முயற்சி மேற்கொண்டார். இது குறித்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருக்கு அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பார்வைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் தடையின் மைச் சான்று அளித்தால் உடனடி யாக சேகாம்பாளையம் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்ட முடியும்.  கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மேற் படி தனியார் நிறுவனத்தின் மூலம் தடையின்மைச் சான்று கோரி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப் பப்பட்டது. ஆனால், ஏறத்தாழ இரண்டு மாத காலம் ஆகியும் இது வரை அந்த கடிதத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அளிக்க வில்லை. வகுப்பறை கட்டுவதற்கு தடையின்மை சான்றும் வழங்க வில்லை. இதையடுத்து, பள்ளி பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்தராஜ் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் தனி யார் நிறுவனம் ரூ.14 லட்சம் மதிப் பீட்டில் வகுப்பறை கட்டுவதற்கு வட் டார வளர்ச்சி அலுவலர் தடை யின்மை சான்று வழங்காமல் கால தாமதம் செய்து வருவதை குறிப் பிட்டு, உடனடியாக அனுமதி வழங்க வும், பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய வகுப்பறை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட் டுக் கொண்டார். இப்பிரச்சனை குறித்து ஆனந்த ராஜ் கூறுகையில், புதிய வகுப்பறை கட்டுவதற்கு தடையின்மை சான்று வழங்குவது தொடர்பாக தம்மை தனி யாக வந்து சந்திக்கும்படி பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறிய தாகவும், எதற்காக இப்பிரச்சனை யில் தனியாக சந்திக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி, அதை மறுத்து விட்டதாகவும் ஆனந்தராஜ் கூறினார். சேகாம்பாளையம் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் புதிய  ஸ்மார்ட் வகுப்பறை கட்டுவதற்கு தடை யின்மை சான்று வழங்காவிட்டால் அடுத்த ஓரிரு தினங்களில் அப்பகுதி மக்கள் சார்பில் போராட்டம் நடத்த வும் தயாராக இருப்பதாக ஆனந்த ராஜ் தெரிவித்தார்.