districts

img

ஊதியத்தை குறைத்தது தனியார் நிறுவனம்: தூய்மை பணியாளர்கள் புகார்

கோவை, ஜூன் 26- ஊதியத்தை குறைத்து தனியார்  நிறுவனம் வழங்குவதாக குற் றஞ்சாட்டி காரமடை நகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தூய்மைப்பணிகளை தனியா ருக்கு தாரை வார்க்க கூடாது, இத னால், தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும், வேலையி ழப்பு ஏற்படும், சேவை என்பதை தாண்டி லாபம் என்கிற நிலைக்கு தனியார் நிறுவனங்கள் செயல் படும் என மார்க்சிஸ்ட் கட்சி, சிஐ டியு உள்ளிட்ட இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகிறது. இந் நிலையில், கோவையில் திங்க ளன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத் தில், காரமடை நகராட்சிக்கு உட் பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனியார் நிறுவ னம் ஊதியத்தை குறைத்து கொடுப் பதாக குற்றம்சாட்டி புகார் அளித் தது. இடதுசாரிகளின் போராட்டத் தில் நியாயம் உள்ளது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.  இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் காரமடை நகராட்சியில் தூய்மை பணியாளர் களாக பணிபுரிகிறோம். சுமார் 80 நபர்கள் கடந்த 8 முதல் 15 ஆண்டு களாகவும், மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளாகவும் மொத்தம் 130 பேர்  பணியாற்றி வருகிறோம்.   கடந்த ஆண்டு  காரமடை நகராட்சியில் குப்பை எடுக்கும் பணியை ஒப் பந்த அடிப்படையில்  தனியார் நிர் வாகத்திற்கு  வழங்கி விட்டது. இனி எங்களுக்கு வழங்கி வந்த ரூ.606 சம்பளத்தை பாதியாக குறைத்து இஎஸ்ஐ, பிஎப் போக ரூ.391 மட் டுமே வழக்கப்படும் என்றும், சேவை கட்டணமாக ரூ.50 பிடித்துக் கொள் ளப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நாங் கள் ஜூன் மாதம் 7 ஆம் தேதியன்று வேலைக்கு செல்லாமல் புறக் கணித்தோம். இதனையடுத்து, தூய்மை பணியாளர்கள் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் கார மடை நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முழு சம்பளம் தர மறுத்து விட்டார்கள். அதனால் நாங் கள் வேலைக்கு செல்ல மறுத்து விட் டோம். இதன் பிறகு  ஆர்டிஒ அவர் கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.50ஐ சேவை கட்டணம் பிடிக்கா மல் இந்த மாதம் சம்பளம் ரூ.450 வழங்கப்படும் என்றார்கள். இன்று உள்ள விலைவாசி உயர்வில், இந்த  சம்பளத்தை வைத்து குடும்பத்தை  நடத்த முடியாது. பெரும் நெருக் கடியை தூய்மை பணியாளர்கள் நாங்கள் சந்தித்து வருகிறோம்.  ஆகவே, எங்களுக்கு முழு ஊதி யம் வழங்க வேண்டும். பல ஆண்டு காலம் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிய தூய்மை பணியாளர் களை நிரந்திரம் செய்ய வேண்டும். எங்களின் வாழ்நிலையை கருத் தில் கொண்டு ஆட்சியர் நல்ல  உத்தரவை பிறப்பிக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி ஆட்சியரி டம் மனு அளித்ததாக தெரிவித்த னர்.