கோவை, ஜன.27- முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தனியார் நிறுவ னத்தை கண்டித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த போக்கஸ் எஜுமேட்டிவ் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் பணிகளை செய்து வருகிறது. இதன் கிளைகள் கோவை சுங்கம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ளது. சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் கடந்த ஜன.25 ஆம் தேதியன்று இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இந்நிறுவன மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பின்றி நிறுவனம் மூடப்பட்டதை கண்டித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், இந்நிறு வனத்தில் 12 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை பணி புரியும் ஏராளமான ஊழியர்கள் உள்ளனர். இந்நிலை யில் திடிரென எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிறு வனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் எங்களது, வருகை பதிவை, பதிவு செய்யாமல் இருந்துள்ளனர் என்றனர். முன்ன தாக, கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென வேலையை விட்டு நிறுத்திய தகவலை அறிந்து, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் கே.மனோகரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.தினேஷ் ராஜா மற்றும் சிஐடியு, வாலிபர் சங்கம் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சந்தித்து பேசினர். பின்னர் தொழிலாளர் கள் நலத்தை துறை இணை ஆணையாளர் ராஜ்குமாரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.