districts

img

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

நாமக்கல், மார்ச் 3- இருசக்கர வாகன ஓட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று ஈரோடு  நோக்கி பள்ளிபாளையம் சாலையில் வந்து கொண்டிருந் தது. அப்போது, வெப்படை என்ற பகுதி அருகே தனியார்  பேருந்து வந்தபோது, அதே வழியில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், வாகன ஓட்டி  கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைத்தொ டர்ந்து, அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைகாக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தை  ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொது மக்கள் சின்னார்பாளையம் அருகே மடக்கி பிடித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார், பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகு தியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.