பள்ளிபாளையம், ஜன.10- பாம்புகளின் புகழிடமாக உள்ள பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் வருவதற்கே அச்சப்படுகின் றனர். புதர்களை அகற்றி சுத்தப்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே காலியிடம் உள்ளது. இப்பகுதியில், குற்ற வழக்கு களில் பிடிக்கப்படும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த இடத்தில் போதிய பராமரிப்பு இல்லை. இதனால் குற்ற வழக்கில் பிடிபடும் வாகனங்கள் துருப்பிடித்து சேத மடைந்து வருகிறது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் புதராக காட்சியளிக்கிறது. இந்நிலையில், திங்களன்று இரவு பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்குள் சுமார் இரண்டடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இந்த பாம்பை காவலர்கள் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர். இது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது என்பதால், காவல் நிலை யத்திற்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பாம்புகளின் புகழிடமாக உள்ள பள்ளிபாளையம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். குற்ற வழக்குகளில் பிடிப்பட்ட வாகனங்களை பாதுகாப்பான முறையில் நிறுத்துவதற்கு ஏது வான வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.