districts

img

மாணவர்கள் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணர புதிய திட்டம்: பள்ளிக்கல்வி அமைச்சர்

திருப்பூர், ஜூலை 26- 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும்  மாணவர்கள் படிப்பில் மட்டும் அல் லாமல் விளையாட்டு போன்ற துறைக ளிலும் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வர பேட்ரி டெஸ்ட் என்ற திட் டம் துவங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி தெரிவித் தார். மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறை களின் மீது கவனத்தை செலுத்த வைப் பதன் மூலம்  அவர்களுக்கு புதிய தன் னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி  கல்வி துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் , செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆகியோர்  கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றது. முதலாவதாக திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிக ளிக்கான உலக திறனாய்வு உடற்தி றன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில் பேசிய அன்பில் மகேஷ் ,  6,7,8  ஆம் வகுப்புகளில் படிக்கும் மாண வர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல்  விளையாட்டு போன்ற துறைகளி லும் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வரவே இது போன்ற போட் டிகள் நடத்தப்படுகின்றன என்றார். விளையாட்டு என்று வரும்போது  உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர் கள் அதை பெறும்போது சமூகமும்  அதை பெறும் என்றார். விளையாட் டில் அதிகம் ஈடுபடும் போது, உடல்ரீ தியாகவும், மனரீதியாகவும்  சுறுசு றுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும்  அதிக கவனம் செலுத்த முடியும் என  கூறினார்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி அறி முகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர் களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளை யாட்டு பயிற்சிக்கான செலவை பள் ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் உள்ளதாக கூறினார். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை  துவக்கி வைத்தார். இதையடுத்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள்  கலந்து கொண்ட ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ, மாணவிகளின் நலன் கருதி  அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை  எப்படி வெற்றிகரமாக செயல்படுத் துவது என பள்ளி கல்வி அதிகாரிகளு டன் ஆலோசனை மேற்கொள்ளப்பட் டது என கூறினார். மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால் ,  அவர்களை விளையாட்டு துறை களின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்ப டுத்த முடியும் என்றும் செயலி பற்றி அமைச்சர் கூறினார்.  கனியாமூர் நிகழ்விற்கு பிறகு  பள்ளி வளாகத்தில் குழந்தைக ளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என  கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற் றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப் படுவது தொடர்பாக செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். நடக்க  கூடாத சோக நிகழ்வு கள்ளகுறிச்சி யில் நடந்துள்ளது. குழந்தைகள் முழு மையாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என் றும், இது போன்ற சம்பவங்களில் கார ணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். யாரும்  எளிதாக இதில் இருந்து தப்பிவிட  முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்தி லும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப் பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங்  வழங்கும் திட்டமும் செயல்படுத்தப் பட உள்ளது என அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி கூறினார்.