திருப்பூர், டிச.10- குலக்கல்வியைக் கொண்டு வரும் தேசி யக் கல்விக் கொள்கை 2022ஐ திரும்பப் பெற வும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமு றைப்படுத்தவும் வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரச்சார இயக்கம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கல்வி மாவட்டத் தலைநகரங்களில் பிரச்சார இயக்கம் நடத்து வது என்ற ஆசிரியர் கூட்டமைப்பின் முடி வுப்படி சனிக்கிழமை தாராபுரம், உடுமலை பேட்டை, பல்லடம் பேருந்து நிலையங்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அவிநாசி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த பிரச்சார இயக்கம் நடத் தப்பட்டது. இந்த இயக்கத்துக்கு ஆசிரியர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சோ.சந்திர சேகரன் தலைமை ஏற்றார். புதிய தேசிய கல்வி கொள்கையால் 3,5,6 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு 9,10,11,12 வகுப்புகளுக்கு பருவத் தேர்வு என்பது நாட் டின் ஏழை, எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு, மாண வர்களின் இடை நிற்றலை அதிகரிக்கும். மும் மொழி கொள்கை குழந்தைகளின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழி வழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும். 20 மாண வர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்ப தும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக் கும். இடைநிலைக் கல்வி முடிந்தவுடன் கொண்டு வரப்படும் தொழிற்கல்வி, குலக் கல்வித் திட்டமாக அமையும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத் தும் தனியார் மயமாதலின் மூலம் கல்வி முற்றி லும் வணிகமயம் ஆக்கப்படும். தேர்வுகள் நடத்திட தனியார் நிறுவனங்கள் அனுமதிக் கப்படும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ ரத்து செய்ய வேண்டும்.
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக் கால வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே தன்பங்கேற்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக தனது தேர் தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத் தவேண்டும் எனவும் பிரச்சாரம் மேற்கொள் ளப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட் டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பா.ஜெயலட்சுமி, எ.பிரகாஷ், ஏ.சாந்தாமணி ஆகியோர் முன்னி லையில், நிர்வாகிகள் டி.முனியப்பன், அ. பிரபு செபாஸ்டியன், நீ.காட்டுத்துரை, வி. இளங்குமரன், எம்.செல்வகுமார், இரா. ராஜ்குமார், கு.விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, ப.கனகராஜா ஆகியோர் உரையாற்றினர்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். ஆசிரியர் இயக்க நிர்வாகிகள் வி.விநாய கமூர்த்தி, எஸ்.முத்துக்குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாநில பொரு ளாளர் கே.தங்கவேலு பிரச்சார இயக்கத் தைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட் டப் பொருளாளர் நா.பால்ராஜ் நன்றி கூறி னார்.