நாமக்கல், ஜன.17- நாமக்கல் அருகே சேவலை துரத்தி பிடிக் கும் நூதன போட்டி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சேவலை துரத்தி பிடிக்கும் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நந்த வனம் தெருவில் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவலை துரத்தி பிடிக்கும் நூதன போட்டி நடைபெற்றது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி திங்களன்று சேவலை துரத்தி பிடிக் கும் போட்டி நடைபெற்றது. அதாவது ஒரு வட்டத்தின் நடுவில் கண்களை கட்டியப்படி போட்டியாளரை நிற்க வைப்பர். பின்னர் கயிற் றின் ஒரு முனை போட்டியாளரின் காலிலும், மற்றொரு முனை சேவலின் ஒரு காலிலும் கட்டப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திக்குள் வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் அந்த சேவலை பிடிக்க வேண்டும். இந்த போட்டியில் பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.