districts

img

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு நாயை விழுங்க முயன்ற போது பிடிபட்டது

நாகர்கோவில், ஜூலை 17- குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் தெரு நாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.  அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயின் உடலை இறுக்கமாக சுற்றி அதை விழுங்க முயற்சித்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தக்கலை தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அந்த குடி யிருப்பு பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரமாக போராடி புதரில் மறைந்திருந்த மலைப் பாம்பை பிடித்தனர். ஆனால் பாம்பின் பிடியில் சிக்கி கொண்ட நாய் உயி ரிழந்தது. இதனையடுத்து பிடிபட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.