கோவை, அக்.21- கோவை நகரப்பகுதியில் மான் குட்டியை விழுங்கி நகர முடியாத நிலையில் இருந்த மலைபாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதி யில் விடப்பட்டது. கோவை, துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் காவலர் பயிற்சி மையம் உள்ளது. இங்கு காவலர் களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், வெள்ளியன்று காவலர் பயிற்சி மையத்தின் வளா கத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்புத்துறையி னருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித் தனர். அப்போது அந்த பாம்பு, குட்டி மானை விழுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.