திருவனந்தபுரம், ஜன.21- நிதி ஒதுக்காமல் கேரளத்தை புறக்க ணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கேரள மக்கள் ஒரு கோடி பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று பிரம்மாண்ட மனிதச்சங்கிலியாக கைகோர்த்தனர். காசர்கோடு ரயில் நிலையம் முன்பு இருந்து திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகை வரை 651 கி.மீ தூரம் மனி தச்சுவராக பல இடங்களில் இப்போ ராட்டம் நடந்தது. ரயில் பயணச் சிக்கல்கள், ஒன்றிய அரசின் பணியமர்த்தல் தடை மற்றும் கேரள அரசுக்கு எதிரான பொருளா தாரத் தடைகளை எதிர்த்து மனிதச் சங்கிலி அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்தது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் அணிதிரண்ட இந்த மனிதச் சங்கிலியில் விவசாயிகள், தொழிலா ளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 50 லட்சம் பேர் அணிதிண்டு கோடிக் கரங்களால் பாதுகாப்பு அரண் அமைத்தனர். மாலை 4:30 மணிக்கு மனிதச் சங்கிலிக்கான முன்னோட்டம் நடந்தது. 5 மணிக்கு மனித சங்கிலி முடிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முக்கிய மையங்களில் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் காசர்கோட்டில் முதல் இணைப்பாக நின்றார். வாலிபர் சங்கத்தின் முதல் தலைவர் இ.பி.ஜெயராஜன் ஆளுநர் மாளிகை முன்பு கடைசி இணைப்பாக நின்றார். ஆளுநர் மாளிகை முன்பு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியத் தலைவர் பி.கே.ஸ்ரீமதி முன்னி லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மனித சங்கிலியை துவக்கி வைத்தார். அகில இந்திய மற்றும் மாநில தலைவர்கள் பல்வேறு மையங்களில் பங்கேற்றனர்.
தெருக்களில் ஒற்றுமை முழக்கம்
கேரளத்தில் இருந்து பெரும் வருவாய் கிடைத்தாலும், ரயில் பயணி களுக்கு உரிய வசதிகள் ரயில்வேயில் இல்லை. மக்களின் பயணப் பிரச்சனை தீவிரமானது. கேரள அரசு சில்வர் லைன் உள்ளிட்ட வசதிகளை செயல் படுத்த முயற்சிக்கும் போது, அரசியல் ஆதாயத்துக்காக அவற்றை தடுக்கின் றனர். நாட்டில் பணி நியமனங்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடமாக ராணு வத்தில் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை. ஒன்றிய அரசு நிறுவனங்களில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன, ஏராளமான பணி யிடங்கள் அகற்றப்படுகின்றன.
இளைஞர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கு எதிராக ஒன்றிய அரசிடம் இருந்து மாநி லத்திற்கு வழங்க வேண்டிய தொகை யை வழங்காமலும் கடன் வரம்பை குறைப்பதன் மூலமும் மாநிலம் நிதி ரீதியாக நசுக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை யும், மாநிலத்தின் எதிர்காலத்தையும் அழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக வாலிபர் சங்கம் மனிதச் சங்கிலியை நடத்தியது. மாநிலத்தில் உள்ள 29,630 வாலிபர் சங்க கிளைகள் இதற்கான ஆயத்தப் பணிகளை செய்திருந்தன. போராட்டத்தின் முழக்கங்களை எழுப்பியவாறு வாலிபர் சங்க ஊழி யர்கள் மாபெரும் பிரச்சாரம் செய்தனர். தெருவெங்கும் சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள் நிறைந்திருந்தன. சமூக ஊடக தளங்க ளும் மக்கள் மனதில் முழக்கங்களை தீவிரமாக கொண்டு சென்றன. குறுகிய நேர வீடியோக்கள், ரீல்கள் மற்றும் போஸ்டர்கள் சமூக ஊடகங்க ளில் நிரம்பி வழிந்தன. மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தங்களது பாதிப்புகளை ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்க ளாக்கினர். தெருக்களை நிறைத்த மக்கள் கூட்டம் சாலை நெடுகிலும் கரம் கோர்த்து நின்று மாநில உரிமை களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். இதில் திரைக்கலைஞர்கள், எழுத் தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.