நீலகிரி, ஜன.12- குன்னூர் ரன்னிமேடு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டத்தால், தேயிலை தொழிலாளர் கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நான்சச் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த எட்டு காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் ரேசன் கடைகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை சூறையாடியது. இக்காட்டுயானை களை விரட்டும் பணியில் வனத்துறையி னர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், அங்கிருந்து இடம் பெயர்ந்த அக்காட்டு யானைகள், ரன்னிமேடு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்துள் ளது. இதைகண்ட, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதுமட்டுமின்றி, வனத்து றையினரையே காட்டு யானைகள் விரட் டிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத் திற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது, நான்சச் எஸ்டேட் பகுதிக்குள் யானை கள் இடம்பெயர்ந்துள்ளன. சுமார், ஒரு வார காலமாக வனத்திற்குள் செல்லா மல், யானைகள் போக்கு காட்டி வருகின் றன. பெண் யானை உயிரிழப்பு இதனிடையே, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறு முகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மூலையூர் வனப்பகுதி. விவசாய நிலங் களை ஒட்டியுள்ள இந்த வனப்பகு தியிலிருந்து அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வெளி யேறி விளைநிலங்களில் புகுந்து விடுகி றது. இந்நிலையில், கூத்தாமண்டி பிரிவு அடுத்துள்ள மூலையூர் கிராமத்தில் விவ சாய நிலங்களை ஒட்டியுள்ள வனப்ப குதியில், காட்டு யானை ஒன்று உயி ரிழந்த கிடந்தது. இதைக்கண்ட, விவசா யிகள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டு யானை உயிரி ழப்பு குறித்து விசாரணை மேற்கொண் டனர். மேலும், மருத்துவர்களை வர வைத்து, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.