கோவை, ஏப்.11- கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், வனப்பகுதிகள் வறண்டு போகியுள்ளது. இதனால், வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவ சாய நிலத்தில் இரவு நேரத்தில் புகுந்த யானைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. யானை கூட்டத்தை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள், இதுகுறித்து வனத்து றைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை பணியாளர்கள் விரைந்து வந்து யானையை அங்கிருந்து வனப்பகு திக்குள் விரட்டினர். மேலும் இது குறித்த அப்பகுதி விவசாயிகள் கூறும் ்போது, கூட்டம், கூட்டமாக வரும் யானைகள், அடிக்கடி உணவு, தண்ணீர், தேடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்ப டுத்த வனப்பகுதியில் தண்ணீர் உள்ளிட்ட வனவிலங்குக ளுக்கான தேவைகளை உருவாக்க வேண்டும். வனப்ப குதிகளில் இருந்து யானைகள் அங்கு வராமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.