districts

img

வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து

அவிநாசி, டிச.8- அவிநாசி அருகே வெள்ளியம் பாளையத்தில் இருசக்கர வாகனத்தின்  மீது மோதாமல் தடுக்க முயன்ற அரசு  பேருந்து சாலையோரம் இருந்த  வீட்டின் மீது மோதி விபத்துக்குள் ளானது. திருப்பூரில் இருந்து அவிநாசி வழி யாக பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று  கொண்டிருந்தது. அவிநாசி வெள்ளியம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அதே திசையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தடு மாறியதால், அவர் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் எதிர் பாராத விதமாக சாலையோரம் இருந்த  வீட்டின் மீது மோதி  பேருந்து விபத்துக் குள்ளானது. இதில், வீட்டில்  இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும்  ஏற்படவில்லை. இருப்பினும் அரசு  பேருந்தில் பயணம் செய்த 4க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இவர்கள்,  அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். ஓட்டுநரின், முயற்சியால் சாலை யோரம் இருந்த மின் மாற்றி மீது அரசு  பேருந்து மோதாமல் வீட்டின் மீது மோதியது. பொதுமக்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பித்தனர். இது  குறித்து அவிநாசி போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;