சேலம், நவ.15- ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த ராட்சத பாறையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற் காட்டிலிருந்து தருமபுரி மாவட்டம், பொம்மிடிக்கு செல்லும் மலைப்பாதையில் வேப்பாடி என்ற இடத்தில் ராட்சத பாறை சாலையில் உருண்டது. இதனால் அவ்வழியே பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பாதிக்கப்பட் டனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 டன் எடை யிலான ராட்சத பாறையை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அகற்றினர்.