நாமக்கல், அக்.5- தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையின் விளைவாக சுழற்சி அடிப் ப்படையில் மாவட்டம் முழுவதும் ஒவ் வொரு வெள்ளிக்கிழமை நாளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செப். 12 ஆம் தேதி அன்று தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத் தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற் றது. இந்த போராட்டத்தில் சுழற்சி அடிப் படையில் ஒவ்வொரு மாதமும் ஆர்டிஓ தலைமையில் மாற்றுத்திறனாளிக ளுக்கு என சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என பிரதான கோரிக் கையை வைத்தி திருந்ந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று சுழற்சி அடிப்படை யில் முதல் கூட்ட மாக பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட் பட்ட மாற்றுத்திற னாளிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருச்செங் கோடு ஆர்டிஓ சுகந்தி தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங் கத்தின் மாநிலச் செயலாளர் ராஜேஷ், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் எம். ஆர்.முருகேசன், தாலுகா தலைவர் நாகேஸ்வரி, தாலுகா செயலாளர் குண சேகரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்க ளுக்கு தேவைப்படும் உதவிகள், சட்ட சலுகைகள், நிறைவேற்றப்பட வேண் டிய கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசினர். அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறை வேற்றி தரப்படும் என ஆர்டிஓ தெரி வித்தார்.