அழகு சாதனப் பொருட்கள் கடையில் தீ விபத்து
கோவை, ஆக.7- கோவையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பி லானப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. கோவை, ராம்நகர் ராஜாஜி வீதி பகுதியில் நிக்கித் என்ப வருக்கு சொந்தமான அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை நிலையம் உள்ளது. இக்கட்டிடத்தில் 3 மாடிகள் உள்ளன. இதில் முதல் தளத்தில் இருந்து திங்களன்று அதி காலை 3 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. மளமளவென பற்றி எரிந்த தீ 2 ஆவது தளத்திற்கும் பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலானப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. போலீசாரின் முதற்கட்ட விசார ணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிணற்றிற்குள் தவறி விழுந்த இளைஞர் தேடுதல் பணியில் தீயணைப்புத் துறையினர்
அவிநாசி, ஆக.7- அவிநாசி அருகே பெருமாநல்லூர் அருகே கிணற் றுக்குள் தவறி விழுந்த இளைஞரை அவிநாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெருமாநல்லூர் நெரூஞ்சிக்காடு தோட்டத்தில் 80 அடி ஆழம் உள்ள கிணறு அமைந்துள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில், கோத்தகிரியை சேர்ந்த விஸ்வாமுர்த்தி மகன் பிரவீன் (22) உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரவீன் மற்றும் உறவினர் மகன் ஆகியோர் மீன் இருப்பதாக தோட்டத்து கிணற்றின் அருகே திங்களன்று காலை சென்றுள் ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன் கிணற்றுக் குள் தவறி விழுந்தார். உடன் சென்ற சிறுவன் சத்தம் போடவும், அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்பு துறையினர் நீர் உள்ள கிணற்றில் இறங்கி பிரவீனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனம் மோதி ஒருவர் பலி
கோவை, ஆக.7- கோவை, மதுக்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கோவை, பாலக்காடு மெயின் ரோடு தனியார் கல்லூரி அருகே இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழி யாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பா ராமல் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை. இது தொடர் பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்ற பெண்
கோவை, ஆக.7- வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி. இவர் வீடு கட்டுவதற்கு சூலூர் பகுதியில் இடம் வாங்கி உள்ளார். இந்நிலையில், வீடு கட்டி தருவதில் மேற்பார்வை யாளருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண தமிழரசன் என்ற வழக்கறிஞரை இந்திராணி நாடி உள்ளார். தொடர்ந்து இந்திராணியிடம் பணம் பெற்ற தாக கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர் தமிழ ரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும் அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு கட்டடத்தின் பேஸ் மட்டம் மட்டும் கட்டிவிட்டு நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்றும் கூறி, காலம் தாழ்த்தி வந்துள் ளார். இதுகுறித்து இந்திராணி கேட்டதற்கு, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் புகார் கூறியதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய தலைவர், மீதித் தொகையை திருப்பி வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திராணி மண் ணெனையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத் தினர்.
சாலையில் உலவிய கருஞ்சிறுத்தை
உதகை, ஆக. 7- கோத்தகிரி அருகே அதிகாலை நேரத் தில் சாலையில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்கு கள் நடமாட்டம் அதிரித்து வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் கிராமத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளது. அந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத் தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்ச மடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் இரவு நேரத்தில் வெளியே நடந்து செல்லும் போது கருஞ்சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சம் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, கருஞ்சிறுத்தையால் பொது மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள் ளனர்.
தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை கோரி சிதறு தேங்காய் உடைத்து போராட்டம்
திருப்பூர், ஆக. 7 - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர்கள் அமைப்பு சார்பில் திங்களன்று பல்லடத்தில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கள்ளுக்கு தடை நீக்கப்பட வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயி லுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோ கிக்கப்பட வேண்டும், பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முழக்கம் எழுப் பினர். தேங்காய்களை உடைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் குண்டடம் ராசு. மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.
உதகையில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
உதகை, ஆக. 7- 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட் டத்தில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகைக் கார் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மலை மாவட்டமான நீலகிரிக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வரவும், உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகைக் கார்கள் இயக்கபட்டு வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக் கப்பட்ட தூரத்தை விட அதிக தூரத்திற்கு ஆட்டோக்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாகவும், இதனால், வாடகைக் கார் சேவை முடங்குவதால் அதிக தூரத்திற்கு செல்லும் ஆட்டோக்களை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தடுத்து நிறுத்த வேண்டும், சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் ரெட் டேக்சி மற்றும் கோ டேக்சிகள் பேக்கேஜ் முறையில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வ தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் 2020-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட சார் ஆட்சியர் போட்ட உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும், சொந்த பயன்பாட்டுக்கான நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுலா வாகனங்களை குறிவைத்து காவல்துறையினர் ஆன்லைன் மூலம் தவறாக அபராதம் விதிப்பதை கைவிட்டு நேரடி அபராத விதிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகைக் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு னர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஏடிசி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தங்க ளது கோரிக்கைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். உதகையில் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சுற்றுலா வாடகைக் கார் சேவை முடங்கியது.
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு விழா
தருமபுரி, ஆக 7- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 36ஆம் ஆண்டு அமைப்புதினவிழா தருமபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அமைப்புதின விழாவிற்கு மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கோ.பழனி யம்மாள், சங்ககொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் பாக்கியவதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட துணைத் தலைவர்கள் குணசேகரன் காவேரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி திரளா னோர் பங்கேற்றனர்.
கஞ்சா விற்ற 7 பேர் கைது
கோவை, ஆக.7- கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற டாக்சி ஓட்டுநர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, கடைவீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருபோது, உக்கடம் ராமர் கோயில் பின்புறம் நின்றிருந்த ஒரு இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புல்லு காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கரும்புக்கடை பகுதியில், சாரமேடு சலாமத் நகரை சேர்ந்த முகமத் ரோஷன் (24), குனியமுத்தூர் காந்தி நகரை சேர்ந்த பாசில் ரகுமான் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக நாகராஜ் (39), செல்வபுரத்தை சேர்ந்த சுதாகர் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று, சவுரிபாளையம், உடையாம்பாளையம் ஆவின் பூத் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முருகன் (26), பாண்டி (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 45 போதை மாத்திரை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
கோவை, ஆக. 7- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி, வெள்ளி யங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருந்தது. இந்நிலையில் மேல் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலி கமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்த னர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பி யது இதனால் மீண்டும் செவ்வாயக்கிழமை முதல் திறக்கப்ப டும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளி கடத்தல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை
நாமக்கல், ஆக. 7- விசைத்தறி தொழிலாளியை கடத்தி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய் யாத நிலையில், விசைத்தறி உரிமையாளர் வீட்டை எல்டியூசி தொழிற்சங்கத்தினர் முற்று கையில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். அதே பகுதியில் குமார் என்பவர் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், விசைத்தறி ஜவுளி ரகம் மாற்றப்பட்டுள்ளதால் விசைத் தறி தொழிலாளி மாணிக்கம் கூலி உயர்வு கேட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த விசைத்தறி உரிமையாளர் குமார் தொழிலாளி மாணிக்கத் தை காரில் கடத்தி சென்று மோளகவுண்டம் பாளையம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் தொடுத்ததாக கூறப்படு கிறது. இதனையடுத்து, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மாணிக்கத்துடன் சென்று எல்டியூசி தொழிற்சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இரண்டு நாட்கள் ஆகியும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், எல்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர் குமார் வீட்டை முற்றுகையிட ஆவத்திபாளையம் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . இதனை அடுத்து அங்கு விரைந்த பள்ளி பாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் கைது செய்வோம் என்கிற உறுதியளித்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
மூளி குளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
திருப்பூர், ஆக. 7 - திருப்பூரில் சாய மற்றும் சாக்கடை கழிவு நீரால் மாசடைந்து வரும் 26 ஏக்கர் மூளிக் குளத்தினை பாதுகாக்க இயற்கை ஆர்வ லர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் மூளி குளம் உள்ளது. இந்த குளமானது சாய, சாக்கடை கழிவு நீர் மற்றும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து யாருக்கும் பயன்படாத நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புடன் இணைந்து குளத்தை சுத்தப் படுத்தியது. இதைத் தொடர்ந்து குளத்தை யாரும் மாசுப்படுத்தாமல் இருக்க குளத்தை சுற்றிலும் உள்ள கரை பலப்படுத்தப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதன் கார ணமாக குளம் மாசடையாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குளத்தில் மீண்டும் சாய மற்றும் சாக்கடை கழிவுநீர் கலக்க ஆரம்பித்துள்ளது. குளம் மீண்டும் மாசடைய ஆரம்பித்துள்ளது. குளக்கரையின் அருகிலேயே செயல்படும் சாய ஆலை நிறுவனங்கள் மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரி யாமல் வெளியேற்றப்படும் சாய ஆலை கழிவு நீராலும், மாநகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீராலும், இந்த குளமானது மீண்டும் மாசடைய துவங்கி யுள்ளது. இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என வேர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் திங்க ளன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர்.