திருப்பூர், நவ.6- போதை கலாச்சாரத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங் கத்தின் பல்லடம் தாலூக்கா குழு சார்பில் பள்ளி கல்லூரி மாண வர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி பல்லடம் கொங்கு திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியினை மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். பல்லடம் குழு நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், விமல்ராஜ், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் இறு தியாக வெற்றி பெற்ற அணிகளை வாழ்த்தி முன்னாள் மாண வர் சங்கத் தலைவர்கள் செ.முத்துக்கண்ணன், பரமசி வம், ஆனந்த் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கல்கிராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பந்து வீச்சா ளர், சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு பரிசு வழங்கினர். இதில், வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் முருகேஷ், நாகேந் திரன் உள்ளிட்ட வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.