districts

img

கோவில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை!

தருமபுரி, ஜூன் 28- பென்னாகரம் அருகே உள்ள பிரசித்திபெற்ற கோவி லில் ரூ.90 கோடிக்கான காசோலை இருந்தது குறித்து அற நிலையத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிலி யனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனி யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2 ஆவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்க ணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிப டுவது வழக்கம். அந்தவகையில் முனியப்பன் கோவில் பக்தர் கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக் கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்தவகையில், வியாழனன்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர். அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 இருந்ததை கண்டு அதிகாரி கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா? என்றும், அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா? என்பது குறித்தும், இது உண்மையான காசோலையா? அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா? என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.