districts

குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்

கோவை, ஜூன் 11- கருமத்தம்பட்டி அருகே குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தலைமறைவாக உள்ள வரை பிடிக்க போலீசார் தனிப்படை  அமைத்து தேடுதலை தீவிரப்படுத்தி யுள்ளனர். 

கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அருகே உள்ள அப்ப நாயக்கன்பட் டியில் குழந்தை விற்பனையில் ஈடுபட் டதாக அங்கு விடுதி நடத்தி வரும் பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி, அவரது கணவர் மகேஷ் குமார், தாயார் பூனம்  தேவி, தங்கை மேகா குமாரி ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் குழந்தையை வாங்கிய விவசாயி விஜ யன் என்பவரும் கைது செய்யப்பட் டார். விஜயனிடம் இருந்து பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டு, அவர்களிடம் இருந்த ஆண் குழந் தையினையும் போலீசார் மீட்டனர். இரு  குழந்தைகளையும் மீட்ட போலீசார் அவர்களை சைல்ட் லைன் அமைப்பின்  மூலம் பராமரித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த  லாரி ஓட்டுநர் ராம்பாபுவை தனிப்படை  போலீசார் ஆந்திரா சென்று பிடிப்பதற் கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின் றனர். ஆந்திரா ஓட்டுநர் ராம்பாபு அடிக் கடி ஆந்திராவில் இருந்து கருமத்தம் பட்டி அருகே உள்ள தொழிற்சாலைக்கு  பொருட்களை ஏற்றி வந்த நிலையில், பீகார் மாநில குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு குழந்தையை வாங்கி  இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே பீகார் மாநில தம்பதி அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகி யோர் வேறு யாருக்கும் இதே போல   குழந்தைகளை விற்பனை செய்திருக்கி றார்களா என்பது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரையும் காவலில் எடுக்க கருமத்தம்பட்டி அனைத்து மக ளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, புதனன்று (இன்று) நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யவும் போலீ சார் திட்டமிட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து  விசாரிக்கும் பொழுது, வேறு யாருக்கும் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்த குழந்தைகள் விற்பனை யில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு  உள்ளது என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித் துள்ளனர்.