தருமபுரி, மார்ச் 17- பென்னாகரம் அருகே வழிதவறி கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை மீட்கப்பட்ட நிலையில், அதனை முதுமலை யானைகள் மறுவாழ்வு முகாமில் பராமரிக்க கொண்டு செல்லப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் கடந்த 7 ஆம் தேதி விழுந்த 4 மாத குட்டியானை தீயணைப்பு துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானையை வனத்துறையினர் ஒட்டர்பட்டி காட்டு பகுதியில் பராமரித்து வந்தனர். ஒகேனக்கலில் வனத்துறையினரால் பராமரித்து வந்த குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமிற்கு டெம்போ வாகனத்தில் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டது. 4 மாத யானைகுட்டியை ரகு, பொம்மி யானைகளை பராமரித்து வந்த பொம்மன் குட்டி யானையை மருத்துவ குழுவினர் மற்றும் வன ஊழியர்கள் உதவியுடன் பராமரித்து வருகிறார்.