தாராபுரம், டிச.22- தாராபுரத்தில் தமுஎகச மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் 8 ஆம் ஆண்டு புத்தக திருவிழாவை வெள்ளியன்று அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் 8 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி வெள் ளியன்று மாலை உடுமலை சாலை யில் உள்ள அரிமா அரங்கத்தில் துவங்கியது. துவக்க விழாவிற்கு திருப்பூர் மாநகராட்சி மேற்குமண்டல தலைவர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். தமுஎகச மற்றும் பொது நல அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்கக் கோரும் துண்ட றிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து, தாராபுரம் கிளைச்சிறை நூலகத்திற்கு நூல்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். தாரா புரம் வருவாய் கோட்டாட்சியர் அ. ஜெ.செந்தில் அரசன் முதல் விற்ப னையை பெற்றுக் கொண்டார். காவல் துணை கண்காணிப்பாளர் ம.கலையரசன், ஒன்றியக்குழு தலை வர் செ.வெ.செந்தில்குமார், நகர் மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சு.முருகானந் தம், வழக்கறிஞர் க.செல்வராசு வாழ்த்துரை வழங்கினர். புத்தக கண்காட்சி டிசம்பர் 22 முதல் 31 வரை பத்து நாட்கள் நடை பெற உள்ளது. புத்தக கண்காட்சியை ஒட்டி நாள்தோறும் மாலை பல் வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுநர்கள், கவிஞர்கள், கருத்தா ளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி களும் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய தலைப்புகளில் கலை இலக்கிய திற னாய்வு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம் பர் 31 ஆம் தேதி மாலை பரிசுகள் மற் றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப் புகளை சேர்ந்த நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.