திருப்பூர், செப்.27- 67 ஆவது சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந் திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளியன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் 67 ஆவது சர்வதேச காதுகேளா தோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன் னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். இந்த பேரணி தென்னம்பாளையம் வரை சென்று முடிவடைந்து. இதில் மாணவர்கள் செவித்திறன் குறைபாடுடைய சங்க உறுப்பினர்கள் உட்பட சார்ந்த 110 செவித்திறன் குறைபாடு டைய நபர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, செவித்தி றன் குறைபாடுடையவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களு டன் சைகை மொழியில் உரையாடி அவர்களது மகிழ்ச்சியை சைகை மொழியில் வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் உட்பட பலர் கொண்டார்கள்.