திருப்பூர், மே 21- திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.60 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டப் பங்களிப்பு தொகை ரூபாய் 30 கோடியுடன், மொத்தம் ரூ.60 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் சனியன்று காணொலி காட்சி வாயி லாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முன் னிலையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உட்பட திருப்பூர் ரோட் டரி சங்க பிரதிநிதிகள், ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நன் கொடையாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருப்பூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோ யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவத் தீர்வுக்கான அதிநவீன திட் டத்தை, தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுத்த ரோட்டேரியன்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்மொழிந்தனர். இத்திட்டம் புற்றுநோயாளிகளின் நோயறி தலுக்கும், சிகிச்சைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மொத்த திட்டச்செலவு சுமார் ரூ.60 கோடி. நமக்கு நாமே திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.30 கோடி தமிழ்நாடு அரசு மூலமும், திருப்பூர் மாநக ராட்சி மற்றும் அருகிலுள்ள நகரங்களின் பொதுமக்கள், அனைத்து தொழிலதிபர் கள், சங்கங்களின் ஆதரவுடன் ரூ.30 கோடி களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜிடம் மொத்தம் ரூ.3.59 கோடி மதிப்பில் காசோலைகளை நன்கொடையாளர்கள் வழங்கினர்.